Begin typing your search above and press return to search.
அரியலூர் அருகே ரயிலிலிருந்து விழுந்து இளைஞர் உயிரிழப்பு
அரியலூர் அருகே ரயிலிலிருந்து விழுந்த இளைஞர் உயிரிழந்தார்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் ஈச்சங்காடு ரயில் நிலையம் அருகே இளைஞர் ஒருவர் ரயில் தணடவாளம் அருகே இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற விருத்தாசலம் இரயில்வே காவல் உதவி ஆய்வாளர் அசோகன் தலைமையிலான போலீசார் சென்று, உடலை பார்வையிட்டனர். அப்போது, சென்னையிலிருந்து திருச்சி நோக்கி அதிகாலை சென்ற ரயிலிலிருந்து தவறி விழுந்து இளைஞர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்தனர்.
இளைஞரின் வயது சுமார் 35 இருக்கலாம் எனவும், ரோஸ் கலர் அரை கை சட்டை, நீல நிற ஜீன்ஸ் பேண்ட் அணிந்து உள்ளார் என்றும், இளைஞர் உடல் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இளைஞர் குறித்த தகவல் தெரிந்தவர்கள் விருத்தாசலம் ரயில்வே போலீசாரை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்தனர்.