/* */

உ.பி.யில் விவசாயிகள் படுகொலையை கண்டித்து சி.ஐ.டி.யு. ஆர்ப்பாட்டம்

உ.பி.யில் நடந்த விவசாயிகள் படுகொலையை கண்டித்து சி.ஐ.டி.யு.சங்கத்தினர் அரியலூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

உ.பி.யில் விவசாயிகள் படுகொலையை  கண்டித்து  சி.ஐ.டி.யு. ஆர்ப்பாட்டம்
X

உத்தரபிரதேசத்தில் விவசாயிகளை படுகொலை செய்ததை கண்டித்து சி..ஐ.டி.யு சங்கத்தினர் அரியலூரில்  ஆர்ப்பாட்டம் செய்தனர்.


அரியலூர் அண்ணாசிலை அருகே, மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்ததத்தை ரத்து செய்ய வலியுறுத்தி உத்தரபிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை செய்த சம்பவத்தை கண்டித்து சி.ஐ.டி.யு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நாட்டின் பொதுத்துறை சொத்துக்களை மத்திய அரச விற்பனை செய்வதை கண்டித்து முழக்கமிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட பொருளாளர் சிற்றம்பலம் தலைமை தாங்கினார்.இதில் மாவட்ட துணை செயலாளர் க.கிருஷ்ணன், மாவட்டதுனைத்தலைவர் சந்தானம், சி.பி.எம். ஒன்றிய செயலாளர் துரை.அருணன் கண்டன உரையாற்றினார்கள்.

பி.எஸ்.என்.எல்.கந்தன்,‌ இராமசந்திரன், மாதர் சங்கம் பாக்கியம், ஆதிலெட்சுமி, மலர்கொடி, கட்டுமானம் சங்கம் அண்ணாதுரை, கைத்தறி ரகுநாதன் ‌ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 7 Oct 2021 8:50 AM GMT

Related News