Begin typing your search above and press return to search.
அரியலூர் மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்: ஆட்சியர் அறிவிப்பு
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை. மாவட்ட கலெக்டர் அறிவிப்பு.
HIGHLIGHTS
மகாவீர் ஐயந்தியை முன்னிட்டு நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.
அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடம் ஆகிய அனைத்திற்கும் மகாவீர் ஐயந்தியை முன்னிட்டு நாளை 14.04.2022 (வியாழக்கிழமை) ஒருநாள் உலர் தினமாக (DRY DAY) விடுமுறை அறிவிக்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.