மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்
மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
HIGHLIGHTS
இதுகுறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மூலம் அரியலூர் மாவட்டத்தில் 1)தசைசிதைவு நோய் மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி 2)இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 3)முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1) தசைசிதைவு நோய் மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி, 2) இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 18 வயதிற்கு மேற்பட்ட இரு கால்கள் பாதிக்கப்பட்டு இரு கைகள் நல்ல நிலையில் உள்ளோர் மட்டும், 3)முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் (18 வயதிற்கு மேற்பட்டோர்) வழங்கப்பட உள்ளது.
எனவே தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் தங்களது 1)மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல் மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை நகல் (UDID) 2)குடும்ப அட்டை நகல் 3)ஆதார் அட்டை நகல் 4)பணிச்சான்று (கல்லூரி பயில்பவராயின் படிப்பு சான்று, சுயத்தொழில் புரிபவராயின் சுயத்தொழில் புரிவதற்கான சான்று 5)மார்பளவு புகைப்படம்-2 ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், அறை எண்:17, தரைத்தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், அரியலூர்-621704 ல் 19.05.2022 அன்று காலை10.00 மணிக்கு நடைப்பெறும் பயனாளிகள் தேர்வு முகாமில் கலந்துக்கொள்ளவும் மற்றும் மேலும் விவரங்களுக்கு 04329-228840 எண்ணில் தொடர்பு கொண்டு பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.