Begin typing your search above and press return to search.
அரியலூர் மாவட்டத்தில் ஊராட்சி தலைவர்களுக்கு மதிப்பூதியம் ரூ.2 ஆயிரமானது
அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் ரூ.2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் ஊரக பகுதிகளின் வளர்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்களின் பங்களிப்பு முக்கியமானதாக உள்ளதன் காரணமாக அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர மதிப்பூதியம் ரூ.1000 லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது.
அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள அரசாணையின்படி மாதாந்திர மதிப்பூதியம் ரூ.1000 லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.