Begin typing your search above and press return to search.
அரியலூர் நகராட்சி குப்பைகளை அப்புறப்படுத்தக்கோரி இளைஞர்கள் மனு
அரியலூர் நகராட்சி பகுதியில் குப்பைகைள அப்புறப்படுத்தக்கோரி இளைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
HIGHLIGHTS
அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட சடைய படையாட்சி தெரு, கோ.சி. நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை நகராட்சி பணியாளர்கள் ஓரிடத்தில் அதாவது குடியிருப்பு பகுதிகளில் கொட்டி விடுவதாகவும் இதனால் அந்த பகுதி குப்பை மேடாக காட்சி அளிப்பதாகவும், இதனை அப்புறப்படுத்தாமல் நாள்கணக்கில் குப்பைகள் உள்ளதால் துர்நாற்றம் வீசி அதன்மீது பன்றிகள் மற்றும் ஆடு,மாடுகள் மேய்வதாகவும் மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளதாக குற்றம் சாட்டி அப்பகுதி இளைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி உடனடியாக அந்த குப்பைகளை சீர் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.