/* */

நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தை அமைச்சர் துவக்கி வைப்பு

அரியலூர் மாவட்டத்தில் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தினை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தை அமைச்சர் துவக்கி வைப்பு
X

அரியலூர் மாவட்டத்தில் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தினை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.


அரியலூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், காசநோய் கண்டறியும் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று (06.07.2022) கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சரல், டிஜிட்டல் எக்ஸ்ரே பொருத்திய நடமாடும் எக்ஸ்ரே வாகனங்கள் 01.07.2022 அன்று அரியலூர் உட்பட 23 மாவட்டங்களுக்கு தொடங்கி வைக்கப்பட்டது. இந்த வாகனத்தில் மிக துள்ளியமாக நோய் கண்டறியும் டிஜிட்டல் எக்ஸ்ரே, கணினி மற்றும் Artificial Intelligence எனப்படும் நோய் கண்டறியும் கணினி வசதி, குளிர் சாதனப் பெட்டி போன்ற சாதனங்கள் உள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.45 இலட்சம் ஆகும்.

இந்த வாகனம் மூலம் மக்களின் இருப்பிடத்திற்கே சென்று எக்ஸ்ரே மூலம் நோய் கண்டறியப்படும். நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு அன்றைய தினமே சளி பரிசோதனை மேற்கொள்ளப்படும். சளி பரிசோதனையில் காசநோய் உறுதிப்படுத்தப்பட்டவர்களுக்கு இலவசமமாக மருந்துகள் வழங்கப்படும். மேலும், நோயாளியின் ஆரோக்கியத்திற்காக ஊட்டசத்து நிறைந்த உணவுப் பொருட்கள் தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்படும். நோயாளிகளுக்கு நோயின் தன்மை மற்றும் நோய் குணமாகும் வழிமுறைகள், நோய் தடுப்பு முறைகள் போன்றவை விளக்கமாக எடுத்துரைக்கப்படும்.

இவ்வாகனம் வாரத்தில் 5 நாட்கள் செயல்படும். இரண்டு வாரங்களுக்கு தொடர் இருமல், பசியின்மை, தொடர்ச்சியாக எடை குறைதல், சளியுடன் இரத்தம் வருதல் காசநோயின் அறிகுறியாக இருக்கலாம். இந்த அறிகுறியுடையோர் இவ்வாகனத்தை அணுகி சளி பரிசோதனை செய்துகொள்ளலாம். இந்த வாகனம் மூலம் காசநோய் இல்லா அரியலூர் மற்றும் காசநோய் இல்லா தமிழகம் 2025 என்ற இலக்கினை அடைய உறுதுணையாக இருக்கும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார்.

முன்னதாக, காசநோய் கண்டறியும் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தினை பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து, மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்லும் வகையில் வாகனத்தினை பயன்படுத்த மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் அரியலூர் நகர்மன்றத் தலைவர் க.சாந்தி, துணை இயக்குநர் (காசநோய்) மரு.நெடுஞ்செழியன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 6 July 2022 7:22 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!