உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு உதவிசெய்த அமைச்சர் சிவசங்கர்
சிறுகடம்பூர் ஏரியில் விழுந்துஉயிரிழந்த சிறுவன்வசந்த் இல்லத்திற்கு அமைச்சர்சிவசங்கர் சென்று ஆறுதல்கூறி நிதி உதவி வழங்கினார்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் சிறுகடம்பூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் தவறிவிழுந்து உயிரிழந்த சிறுவன் வசந்த் இல்லத்திற்கு தமிழக பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேரில் சென்று அவரது பெற்றோர்க்கு, ஆறுதல்கூறி நிதிஉதவி வழங்கினார்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் கிராமத்தில் அம்பேத்கர் நகரில் வசிக்கும் கண்ணன் கோகிலா இவர்களின் மகன் வசந்த் (வயது 9). இவர் சிறுகடம்பூரில் உள்ள பெரிய ஏரிக்கு, நண்பர்களோடு குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வசந்த் ஏரியில் மூழ்கி உயிரிழந்தர். சிறுவன் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் கிராம பொது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதனையடுத்து சிறுகடம்பூர் கிராமத்தில் உயிரிழந்த சிறுவன் வசந்த் இல்லத்திற்கு தமிழக பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேரில் சென்று அவரது பெற்றோர்க்கு ஆறுதல்கூறி, நிதிஉதவி வழங்கினார். உடன் ஒன்றிய பொறுப்பாளர் பூ.செல்வராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.