/* */

சத்துணவு மையத்தினை திறந்து வைத்த அமைச்சர் சிவசங்கர்

அரியலூர் மாவட்டம் ஓ.கூத்தூர் கிராமத்தில் சத்துணவு மையத்தினை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

சத்துணவு மையத்தினை திறந்து வைத்த அமைச்சர் சிவசங்கர்
X

சத்துணவு மையத்தை திறந்து வைத்த அமைச்சர் சிவசங்கர்.

அரியலூர் ஒன்றியம், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ஓ.கூத்தூர் கிராமத்தில் ரூ.4.52 லட்சம் மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பின் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் சத்துணவு மையத்தினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் புதிய வகுப்பறைகளை கட்டுவதற்கும், பழுதடைந்த கட்டிடங்களை புனரமைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறார்கள்.

அதன் அடிப்படையில், அரியலூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஓ.கூத்தூர் கிராமத்தில் ரூ.4.52 இலட்சம் மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பின் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சத்துணவு மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவு சமைப்பதற்கும் அதனை விநியோகிப்பதற்கும் பயனுள்ள வகையில் இருக்கும் என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் பொ.சந்திரசேகர், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) சு.சுந்தர்ராஜன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சந்தானம், செயற்பொறியாளர் ராஜராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருளப்பன், ஜெயராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Updated On: 21 July 2021 10:43 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!