பெற்றோரிடம் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் விசாரணை
மாணவியின் பெற்றோர் மற்றும் சகோதரர்களிடம் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் விசாரணை.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் வடுகபாளைம் கிராமத்தில் மாணவியின் பெற்றோர் மற்றும் சகோதரர்களிடம் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரியங்கா கனூங்கோ, ஆலோசகர்கள் மதுலிகா சர்மா, கத்யாயினி ஆனந்த் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களுக்கு மதுலிகா சர்மா அளித்த பேட்டி: சிறார் நீதி சட்டத்தின் கீழ் குழந்தைகள் இல்லம் பதிவு செய்யப்பட்ட நிலையில், அதன் பதிவி காலம் கடந்த நவம்பர் மாதத்துடன் முடிவடைந்துள்ளது. தற்போது, அந்த இல்லத்தில் தங்கியிருந்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவி தங்கியிருந்த இடத்தில் இருந்த பணியாளர்கள், சிகிச்சை அளித்த மருத்துவர்கள், பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், கல்வித்துறை அதிகாரிகள், மாணவியின் பெற்றோர் ஆகியோரிடம் ஆணையம் மேற்கொண்ட விசாரணை குறித்த அறிக்கை அரசுக்கு அனுப்ப வைக்கப்படும் என்றார்.