Begin typing your search above and press return to search.
குறைதீர் நாள் கூட்டத்தில் நேரடியாக மனு அளிக்க அரியலூர் கலெக்டர் தகவல்
அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மனுக்களை நேரடியாக அளிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தற்போது கொரோனா பெருந்தொற்று பரவல் குறைந்துள்ளதால் அரசு உத்தரவின்படி அரியலூர் மாவட்டத்தில் நாளை முதல் (07.03.2022) பிரதி திங்கட்கிழமை தோறும் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரை தளத்தில் உள்ள பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. எனவே அரசு வழிகாட்டுதலின்படி முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் பொதுமக்கள் அனைவரும் மனுக்களை நேரடியாக அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.