அரியலூரில் காங்கிரஸ் சார்பில் அமலாக்கத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
அரியலூர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் தலைவர் ராகுல்காந்தியை அமலாக்கத்துறை துன்புறுத்தி வருவதாக கூறி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை விசாரணை என்ற பெயரில் கடந்த 4 நாட்களாக அமலாக்கத்துறை துன்புறுத்தி வருவதாக கூறி அமலாக்கத்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சங்கர் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மாநில காங்கிரஸ் தலைவர் இராஜேந்திரன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்திற்கு அரியலூர் நகர தலைவர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார்.
வட்டார தலைவர்கள் சீனிவாசன், பாலகிருஷ்ணன், திருநாவுக்கரசு, முத்துசாமி, வழக்கறிஞர்கள் வேல்முருகன், சாமிநாதன், உடையார்பாளையம் நகரத்தலைவர் அக்பர்அலி, ஜெயங்கொண்டம் நகரத்தலைவர் அறிவழகன், வட்டாரத் தலைவர்கள் கண்ணன், சக்திவேல், மாமு சிவகுமார், மாவட்ட துணைத்தலைவர்கள் ராகவன், ஜெயராமன், அண்ணாதுரை, பழனிசாமி, அமானுல்லா, பாலா சிவகுமார், கலைச்செல்வன், ராஜேந்திரன், தியாகராஜன், ஜம்பு, துணை அமைப்பு தலைவர்கள் மாரியம்மாள், சகுந்தலாதேவி, செந்தில், தொழிற்சங்கம் ராஜா, சிறுபான்மை பிரிவு குருசாமி, ஒரத்தூர் செல்வராஜ், நகர பொறுப்பாளர்கள் பொன் முத்துக்குமரன், சங்கர், தங்கவேலு, ஆண்டனி தாஸ், ரமேஷ் சங்கர், வீடியோ ரமேஷ், அரியலூர் வட்டார பொறுப்பாளர்கள் ராஜேந்திரன், பழனிமுத்து உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆண்டிமடம் ராஜசேகர் நன்றி கூறினார்.