அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இ.வி.எம் .இயந்திரங்களை கலெக்டர் ஆய்வு
ஜெயங்கொண்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி, உடையார்பாளையம் பேரூராட்சி வரதராஜன்பேட்டை பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்கு மையங்களுக்கு செல்லவேண்டிய வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் மை, மெழுகுவர்த்தி, நூல், ஆவணங்கள் மற்றும் வாக்காளர் பட்டியல் ஆகிய அனைத்தும் தயார் நிலையில் இருக்கிறதா என மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அதேபோல் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையையும் ஆய்வு செய்தார். மேலும் நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தலுக்கான நடவடிக்கைகளையும் நேரில் சென்று மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி ஆய்வு செய்தார். அதேபோல் உடையார்பாளையம் பேரூராட்சி, வரதராஜன்பேட்டை பேரூராட்சிகளிலும் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் சென்று ஆய்வு செய்தார்.