அரியலூர் படைபத்து மாரியம்மன் கோவில் பால்குடம் திருவிழா
பக்தர்கள் கொண்டு வந்த பாலால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்று, அலங்காரம் செய்யப்பட்டு படைபத்து மாரியம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது.
HIGHLIGHTS
ஆடிவெள்ளியை முன்னிட்டு அரியலூர் மேலத்தெருவில் உள்ள அருள்மிகு படைபத்து மாரியம்மன் மற்றும் எண்ணைக்காரத்தெரு அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில்களுக்கு பால்குடம், தீச்சட்டி ஏந்தி பக்தர்கள் வழிப்பட்டனர். ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோயில்களில் சிறப்பு அலங்காரம், குத்துவிளக்கு பூஜை, பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
அரியலூர் மேலத்தெருவில் உள்ள அருள்மிகு படைபத்து மாரியம்மன் கோவில் பால்குட திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக அம்மனுக்கு பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தி பால் அபிஷேகம் செய்து அம்மனை வழிபட்டு சென்றனர். பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள விநாயகர் ஆலயத்தில் இருந்து பால்குடம் எடுத்த பக்தர்கள் முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலமாக சென்றனர். பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பாலால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து அலங்காரம் செய்யப்பட்ட படைபத்து மாரியம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் மாரியம்மனை தரிசனம் செய்தனர்.
இதுபோன்று ஆடி மாதம் முதல் வெள்ளியை முன்னிட்டு அரியலூர் செட்டியேரிக்கரையில் இருந்து பால்குடம் எடுத்துச்சென்ற சுமார் 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எண்ணைக்காரத்தெருவில் உள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். இதனையடுத்து அபிஷேகம் செய்தனர்.
பக்தர்கள் கொண்டு வந்த பாலால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து அலங்காரம் செய்யப்பட்ட படைபத்து மாரியம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அபிஷேகத்தை கண்டு களித்து அம்மனின் பிரசாதத்தைப் பெற்று வழிபட்டு சென்றனர்.