அரியலூர் நகராட்சி நிலைக்குழு தேர்தல் 2-ம் முறையாக ஒத்தி வைப்பு
அரியலூர் நகராட்சி நிலைக்குழு தேர்தல் 2-ம் முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
அரியலூர் நகராட்சியில் இன்று காலை 9:30 மணிக்கு 2ம்முறையாக நகராட்சி நியமனக்குழு, வரிமேல்முறையீட்டுக்குழு மற்றும் ஒப்பந்தப்புள்ளி குழுக்களுக்கான தலைவர் மற்றும் உறுப்பினர் தேர்தல் நடைபெறுவதாக அரியலூர் நகராட்சியின் ஆணையரும் தேர்தல் நடத்தும் அலுவலரான சித்ரா சோனியா அறிவித்திருந்தார்.
இதனையடுத்து நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க உறுப்பினர்கள் 8வது வார்டு ராஜேந்திரன், ஒன்பதாவது வார்டு மகாலட்சுமி, 10வது வார்டு இன்பவல்லி, 11வது வார்டு முகமது இஸ்மாயில், 13வது வார்டு வெங்கடாஜலபதி, 17வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் ஜீவாசெந்தில் மற்றும் 12வது வார்டு கவுன்சிலர் மலர்கொடி மனோகரன் ஆகிய 7 பேர் மட்டுமே வருகை தந்திருந்தனர்.
தி.மு.க. கவுன்சிலர்கள் மற்றும் அவர்களது ஆதரவு கவுன்சிலர்கள் 11பேர் நகர்மன்ற கூட்டத்தில் நடைபெற்ற தேர்தலில் பங்கேற்கவில்லை.
போதிய உறுப்பினர்களின் கோரம் இல்லை என்பதால் இன்று நடைபெற இருந்த நியமன குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலரும் நகராட்சி ஆணையர் சித்ரா சோனியா அறிவித்தார்.
அரியலூர் நகராட்சி துணைத்தலைவர் மற்றும் நியமனக்குழு, வரிமேல் முறையீட்டுக்குழு மற்றும் ஒப்பந்தப்புள்ளி குழுக்களுக்கான தலைவர் மற்றும் உறுப்பினர் தேர்தல்கள் தி.மு.க. கவுன்சிலர்கள் மற்றும் அவர்களது ஆதரவு கவுன்சிலர்கள் 11பேர் நகர்மன்ற கூட்டத்தில் பங்கேற்காததால் இரண்டுமுறை ஒத்திவைக்கப்பட்டடுள்ளது குறிப்பிடத்தக்கது.