/* */

தைப்பூசம் - பால்காவடி எடுத்து பக்தர்கள் வழிபாடு

தைப்பூசம் - பால்காவடி எடுத்து பக்தர்கள் வழிபாடு
X

அரியலூர் மாவட்டத்தில் தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு பால்காவடி எடுத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

அரியலூர் மாவட்டம் பெரம்பலூர் சாலையில் உள்ள அருள்மிகு சுப்பிரமணியர் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூசத்திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டும் பக்தர்கள் செட்டியேரிக்கரையில் இருந்து பால்காவடி, பால்குடம் ஆகியவற்றை சுமந்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக முக்கிய வீதிகளின் வழியே சென்றனர். கோவிலை அடைந்தவுடன் பக்தர்கள் எடுத்து வந்த பாலால் முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.

இதன் பிறகு சந்தனம், இளநீர், தேன், தயிர், திரவியப்பொடிகள் உள்ளிட்ட ஒன்பது வகையான திரவியங்களால் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து மலர் மாலைகளாலும், வெள்ளிக்கவசத்தாலும் அலங்கரிக்கப்பட்ட முருகப்பெருமானுக்கு மகாதீபாராதனை நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் வெற்றிவேல் முருகா, வீரவேல் முருகா, முருகனுக்கு அரோகரா என்று கோஷமிட்டு முருகப்பெருமானை வழங்கி வழிபட்டனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Updated On: 28 Jan 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  3. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  4. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  5. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  6. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  7. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  8. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  9. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...
  10. வீடியோ
    திருக்குறளை 100 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் Modi !#thirukural...