/* */

திருப்பூர் மாவட்ட பள்ளிகளில் விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் விளையாட்டு போட்டி நடத்த அனுமதி அளிக்கப்படுவதாக, கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

திருப்பூர் மாவட்ட பள்ளிகளில் விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதி
X

கலெக்டர் வினீத்

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று பள்ளி மேலாண்மைக்கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள 1327 பள்ளிகளில் இக்கூட்டம் நடந்தது. இதில், பெற்றோர் - ஆசிரியர்கள் பங்கேற்றனர். திருப்பூர் நஞ்சப்பா பள்ளியில் நடந்த கூட்டத்தில், கலெக்டர் வினீத் பஞ்கேற்றார்.

அங்கு நடந்த கூட்டத்தில், கலெக்டர் வினித் பேசுகையில், பள்ளிகளுக்கு குழந்தைகளை பெற்றோர் ஆர்வமுடன் அனுப்ப வேண்டும். காலதாமதம், பதற்றமின்றி குழந்தைகளை அனுப்பி வைக்க வேண்டும். ஆர்வமுள்ள மாணவர்களை என்.சி.சி. - என்.எஸ்.எஸ் விளையாட்டு போட்டி போன்றவற்றில் சேர்த்து விடலாம்.

தற்போது, கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் குறைந்துள்ளது. எனவே, திருப்பூர் மாவட்ட பள்ளிகளில், விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. அதே நேரம் பெருந்தொற்று வழிகாட்டுதல்கள், கல்வித்துறை அறிவுறுத்தல்களை பின்பற்றி போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்றார்.

Updated On: 21 March 2022 2:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’