/* */

கல்வாழை தலவிருட்சமாக கொண்ட திருப்பைஞ்ஞீலி கோயில் பற்றி தெரியுமா?

Thirupanjali Temple History in Tamil - தமிழகத்திலுள்ள பல கோயில்கள் சிறப்பு மிக்கவை. அக்கால கட்டிடக்கலைக்கு சான்றாக இன்றளவில் இவை விளங்கிவருவது தமிழகத்திற்கே பெருமையாகும்.

HIGHLIGHTS

கல்வாழை தலவிருட்சமாக கொண்ட  திருப்பைஞ்ஞீலி கோயில் பற்றி தெரியுமா?
X

திருப்பைஞ்ஞீலி கோயிலின்  முகப்பு கோபுரம் (பைல்படம்)


Thirupanjali Temple History in Tamil-தமிழகத்திலுள்ள கோயில்கள் மிகவும் புராதனமிக்கவை. நுட்பமான கட்டிடக்கலையோடு அக்கால மன்னர்கள் கோயில்களை தமிழகம் முழுக்க நிர்மாணித்துள்ளது இன்றளவு வரலாறு பேசுகிறது.தொழில்நுட்பங்கள் வளர்ச்சியில்லாத காலத்தில் கட்டப்பட்டவைதான் இக்கோயில்கள். மதுரை மீனாட்சி, சிதம்பரம் நடராஜர், திருவண்ணாமலை அருணாசலேசுவரர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர்,சுசீந்தரம், மற்றும் கும்பகோணத்தில் உள்ள கோயில்கள் என இதுபோல் எண்ணற்ற கோயில்களை சொல்லலாம். கலை நயம், நுணுக்கமான கற்சிலைகள், என வியக்கத்தக்க வகையில் ஒவ்வொரு கோயிலும் கட்டடப்பட்டிருப்பதைப்பார்க்கும் போது இதற்கு எத்தனை பேர் வேலை பார்த்திருப்பார்கள் என எண்ணத்தோன்றும்.

பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆண்டுதோறும் தமிழகத்திற்கு குழுக்களாக வந்து இக்கோயில் பற்றி ஆய்வு செய்வதுடன் ஒரு சிலர் இங்கேயே நிரந்தரமாக தங்கியுள்ளனர். திருவண்ணாமலைக்கு சென்றால் இதன் உண்மை பற்றி தெரியும். பல ஆங்கிலேயர்கள் திருவண்ணாமலையில் நிரந்தரமாகவே தங்கியுள்ளது இதற்கு சான்றாக விளங்குகிறது. அந்த வகையில் கலைநுட்பத்தோடு நம் மன்னர்கள் பாரபட்சம் பாராமல் ஆன்மீகத்திற்கு அருளிச் சென்றது இவ்வுலகம் உள்ள வரை பெயர் சொல்லும் விதமாக தமிழகத்திற்கு பெருமை சேர்த்து வருகிறது.

அந்த வகையில் இந்த திருப்பைஞ்ஞீலி கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாக விளங்கி வருகிறது. இதன் சிறப்புகளைப் பற்றி விரிவாக காண்போம்.

61 வது சிவத்தலம்.

திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் கோயில் என்பது சம்பந்தர், சுந்தரர், அப்பர் ஆகியோரால் தேவாரம் பாடல்பெற்ற சிவத்தலமாகும். மூலவர் ஞீலிவனேஸ்வரர் என்றும், தாயார் விசாலாட்சி, நீல்நெடுங்கண்நாயகி என்றும் அழைக்கப்பெறுகிறார். இத்தலத்தில் 7 தீர்த்தங்கள் மற்றும், கல்வாழை தலவிருட்சமாக உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 61வது சிவத்தலமாகும்.

தலவிருட்சம் கல்வாழை

ஞீலி என்பது மனிதர்கள் உண்ண இயலாத இறைவனுக்கு மட்டுமே படைப்பாகிற ஒரு வகைக் கல்வாழை. இதுவே இத்தல மரமாக அமைந்ததால், இது ஞீலிவனம் எனப் பெயர் பெற்றது.

நீலகண்டனார் சிதம்பரத்தில் தாம் கொண்டிருந்த ஆடலரசன் கோலத்தை வசிட்ட மாமுனிக்கு இத்தலத்திலேயே காட்டியமையால், இது மேலச் சிதம்பரம் என பெயர் பெற்றது.

ஏழு கன்னிமார்களான பிராம்மி, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் திருமண வரம் வேண்டி இவ்விடத்தில் தவம் இயற்றுகையில், பார்வதி அன்னை அவ்ர்கள் முன் தோன்றி, அவர்களுக்கு வரம் அளித்ததுடன், வாழை மர வடிவில் அத்தலத்திலேயே குடி கொண்டு என்றேன்றும் தனது காட்சியினைக் கண்டு களித்தேயிருக்கலாம் எனப் பெரும் பேறளித்தாள். பின்னர், அவ்வாழை வனத்தின் மத்தியில் சிவனாரும் லிங்க வடிவில் சுயம்புவாக எழுந்தருளினார்.

சிறப்பு அலங்காரத்தில் சிவலிங்கம்.அடுத்த படம் ஆண்டுதோறும்இக்கோயிலின் தேரோட்டம் (பைல்படம்)

தென்கைலாயம்

முன்னொருகாலத்தில் வாயுவுக்கும், ஆதிசேசனுக்கும், யார் பெரியவர் என்ற அகந்தைக் கூடியது. அதிசேசன் கைலாய மலையை சுற்றி வளைத்துக் கொண்டார். கைலாய தளர்த்த சண்ட மாருதத்தை (கடுமையான சூறாவளிக் காற்று) உண்டு பண்ணினார். சண்ட மாருதம் கடுமையாக வீசியதால் கைலாயத்திலிருந்து எட்டு கொடுமுடிகள் (சிகரங்கள்) பெயர்ந்து விழுந்தன.அவைதிருகோணமலை, திருகாளத்தி, திருசிராமலை,திருஈங்கோய்மலை,ரஜிதகிரி,. நீர்த்தகிரி

ரத்தினகிரி,. சுவேதகிரிஎன்பனவாகும். இவற்றுள் சுவேதகிரி என்பதே இத்தலமான திருப்பைஞ்ஞீலி. ஆகவே இது தென்கைலாயம் என வழங்கப்படுகிறது.

கோயிலின்சிறப்புகள்

திருக்கடையூரில் தாம் காலால் உதைத்தமையால் மாண்ட தர்மராசனுக்கு இறைவன் மீண்டும் குழந்தையாக உயிர் கொடுத்த தலம். குடைவரைக் கோயிலாக அமைந்துள்ள ஒரு சந்நிதி இங்கு எமனுக்காக உள்ளது.

எமனுக்கான சிறப்புச் சந்நிதி உள்ளமையால், இங்கு நவக்கிரகங்கள் கிடையாது.நடராசப் பெருமானை வணங்கும் வசிட்ட மாமுனி, ஒரு முறை இங்கு வந்து இரவில் இங்கு தங்க நேர்ந்தமையால், இறைவனார் அவருக்கு தமது ஆடலரசன் தோற்றத்தினை இவ்விடத்திலேயே காட்டியருளினார்.

அப்பர் பெருமான் இத்தலமேக விரும்பி நடக்கையில் வழி தவறி நிற்கையில், எம்பெருமானே அந்தணர் வடிவில் அவரது பசியாற்றி இத்தலத்திற்கு வழிகாட்டுவித்தார். "சோற்றுடைய ஈஸ்வரன்" என்னும் பெயர் கொண்டு அவருக்கு இத்தலத்தில் ஒரு தனிச்சந்நிதியும் அமைந்துள்ளது.

திரு ஆனைக்காவினைப் போன்று ஐந்து பிரகாரங்கள் கொண்ட இத்தலத்தில், ஏழு தீர்த்தங்கள் உள்ளன. அவை விசாலாட்சி, எமன், கல்யாணி, அக்னி, தேவ, அப்பர் மற்றும் மணியங்கருணை என்பனவாகும்.இத்தலம், சம்பந்தர், சுந்தரர் மற்றும் அப்பர் ஆகிய நாயன்மார்களின் பாடல் பெற்ற தலமாகும்.

இது காவேரி நதியின் வடகரையில் பாடல் பெற்ற தலங்களில் 61ஆம் தலமாக விளங்குகிறது.ஒவ்வொரு வருடமும், புரட்டாசி மற்றும் பங்குனி ஆகிய மாதங்களில், சுயம்பு லிங்கத்தின் மீது சூரியக் கதிர்கள் படர்வதைக் காண்பது மெய்யனுபவமாக விளங்கும்.

திருப்பைஞ்ஞீலி கோயிலின் முகப்பு தோற்றம் (பைல்படம்)

பொதிசோறு நிகழ்வு

திருச்சிராப்பள்ளி, திருக்கற்குடி, திருப்பராய்த்துறை ஆகிய தலங்களையடுத்து, திருநாவுக்கரசர் இத்தலம் நோக்கிவந்தபோது தண்ணீரின் தாகமும், பசியும் அவரை வாட்டியன. அவருடைய களைப்பைப் போக்க எண்ணிய சிவபெருமான் அவர் வரும் வழியில் ஒரு குளத்தையும், தங்கி இளைப்பாறுவதற்காக ஒரு மண்டபத்தையும் உருவாக்கி கூட்டுச்சோறு வைத்துக் கொண்டு முதிய அந்தணர் வடிவில் காத்துக்கொண்டிருந்தார். களைத்து வந்த அப்பருக்கு பொதிச்சோற்றை உண்டு குளத்து நீரைப் பருகியும் மேலே செல்லும்படி இறைவன் தெரிவித்தார். அப்பரும் அவ்வாறே செய்தார். அந்தணரிடம் அவர் எங்கு செல்கின்றார் என்று அப்பர் கேட்க, தானும் திருப்பைஞ்சீலி செல்வதாக இறைவன் கூறவே இருவரும் பேசிக்கொண்டே சென்றனர். திருப்பைஞ்சீலி கோயிலின் அருகில் வந்தவுடன் அந்தணர் மறைந்தார். அப்போதுதான் இறைவனே அந்தணராக வந்து, உணவு அளித்ததை அப்பர் புரிந்து கொண்டார். ஞானசம்பந்தருக்கு இறைவன் பொதிசோற்றினை திருக்குருகாவூர் கோயிலில் கொடுத்தார்.

இது பல்லவர் காலக் கோயிற்கட்டிட அமைப்பைக் கொண்டுள்ளது.பைஞ்ஞீலி மகாதேவர் மற்றும் பைஞ்ஞீலி உடையார் ஆகிய பெயர்களில் இது சோழர் காலக் கல்வெட்டுக்களில் காணப்படுகிறது.

திருத்தலப் பாடல்கள்

தூயவன் தூயவெண் நீறு மேனிமேல் பாயவன்

பாயபைஞ் ஞீலி கோயிலா மேயவன் வேய்புரை

தோளி பாகமா ஏயவன் எனைச் செயுந் தன்மை என்கொலோ.

காரு லாவிய நஞ்சை யுண்டிருள்

கண்டர் வெண்டலை யோடுகொண்

டூரெ லாந்திரிந் தென்செய் வீர்பலி

ஓரி டத்திலே கொள்ளும் நீர்

பாரெ லாம்பணிந் தும்மை யேபர

விப்ப ணியும்பைஞ் ஞீலியீர்

ஆர மாவது நாக மோசொலும்

ஆர ணீய விடங்கரே.

கண்டவர் கண்கள் காதல் நீர் வெள்ளம் பொழிதரக் கை குவித்து இறைஞ்சி

வண்டறை குழலார் மனம் கவர் பலிக்கு திரு வடிவு கண்டவர்கள்

கொண்டது ஓர் மயலால் வினவு கூற்று ஆகக் குலவு சொல் கார் உலாவிய என்று

அண்டர் நாயகரைப் பரவி ஆரணிய விடங்கராம் அருந் தமிழ் புனைந்தார் .


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 8 April 2024 9:22 AM GMT

Related News