தேப்பெருமாநல்லூர் சிவன் கோவில் மறுபிறவி இல்லாத சிவன் ஆலயம்
Thepperumanallur Shiva Temple-எந்த ஒரு மனிதனுக்கு மறுபிறவி இல்லையோ அவரால் மட்டுமே கோவிலுக்குள் நுழைய முடியும்.மற்ற யார் நினைத்தாலும் செல்ல முடியாது
HIGHLIGHTS
Thepperumanallur Shiva Temple-எந்த ஒரு மனிதனுக்கு மறுபிறவி இல்லையோ அவரால் மட்டுமே இந்த கோவிலுக்கு நுழைய முடியும்.மற்ற யார் நினைத்தாலும் இந்த ஆலயத்திற்கு செல்ல முடியாது. அதையும் தாண்டி செல்ல நினைப்பொருக்கு செல்ல முடியாத அளவுக்கு தடைகள் வந்து கொண்டே இருக்கும். மகாசித்தர் அகத்திய முனிவரே இந்த கோயிலுக்கு வர பலமுறை முயற்சித்தும் வர முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தேப்பெருமாநல்லூர் என்ற இடத்தில் உள்ள ஸ்ரீ விஸ்வாத சுவாமி ஆலயம் தான் அது. இந்த ஆலயத்தில் வருடத்தின் 365 நாட்களும் சூரிய ஒளி சிவன் மீது விழுமாம்.அதேபோல் வருடத்திற்கு ஒருமுறை நல்ல பாம்பு ஒன்று அந்த ஆலயத்திற்கு வந்து சிவ பெருமானுக்கு வில்வ பூஜை செய்து விட்டு, தனது தோலை சிவனுக்கு மாலையாக அணிவித்து விட்டு செல்லுமாம். மேலும் இத்தல இறைவனை பிரதோஷம் அன்று தரிசித்தால் ஆயிரம் மடங்கு புண்ணியம் கிடைக்கும்.
இது மகா சித்தர் அகத்திய முனிவரே இந்த கோவிலுக்குள் வர பல முறைகள் முயற்சித்தார் ஆனால் முடியவில்லை என சொல்லப்படுகிறது. அதுபோல வருடத்துக்கு ஒருமுறை நல்ல பாம்பு இங்கு வந்து சிவனுக்கு வில்வ பூஜை செய்வதற்கு தனது தோலை சிவனுக்கு மாலையாக அணிவித்து அணிவகுத்துச் செல்கிறது. இந்த கலியுகத்தில் நடக்கின்ற ஓர் அதிசயம் என்று கூறலாம். இங்கு உள்ள சிவனை பிரதோஷம் அன்று தரிசிப்பது கோடி புண்ணியங்களை கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
"ஸ்ரீ விஸ்வநாத சுவாமி ஆலயம் ருத்ரேஸ்வரர் கோவில்" இருக்குமிடம்: தேப்பெருமாநல்லூர், கும்பகோணத்தில் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதன் வரலாறு "ஓம் நமசிவாய" புல்லாகி, பூண்டாகி ,புழுவாய், மரமாகிப,பல் விருகமாகிப், பறவையாய்ப், பாம்பாகிக், கல்லாய் மனிதராய்ப் ,பேயாய்க் கணங்களாய் ,வல் அசுரராகி ,செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இறந்தேன், பிறவாமை என்னும் பெரும் பெயரை நாடு இது அடிகளாரின் உள்ளம்.
கும்பகோணத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் தேபெருமனல்லூர் உள்ளது. புராண காலத் தொடர்புடைய இத்தலத்தில் வேதாந்த நாயகி விஸ்வநாத சுவாமி அருள்புரிகிறார். இதன் திருக்கோவில் வேதாந்த நாயகி அம்மாள்.
வேதாந்த நாயகி அம்மாள் வேறெங்கும் காணக்கிடைக்காத காட்சிகளை வலது காலை எடுத்து வைத்து முன்னோக்கி வந்து நம்முடன் பேசுவதுபோல் காட்சியளிக்கிறது. இவரை வழிபட்டால் திருமணத் தடை தீய தடை ஆகியவற்றை நீங்கும் என்பது ஐக்கியமாகும். ஜோதிடர்களை ஒருசேர தரிசித் தால் அந்தப் பாவம் நீங்கும் என்று கூறுகிறார்.
இக்கோவிலில் ராகு பகவானும், கேது பகவானும் ஒரே இடத்தில் அருள் கூறுகின்றார்கள். இவர்கள் வேறு எங்கேயும் காட்சி தருவதில்லை. ஒரே இடத்தில் இருவரையும் தரிசியுங்கள் என்ற ஒற்றுமையோடு அருளுகின்றனர். நவகிரகம் கற்பகிரகம் என்று இரு வகைப்படும்.
நவ கிரகங்களில் ஒவ்வொன்றும் மாறுகின்ற திசையில் இருப்பது இங்கு மட்டும்தான். கர்ப்பகிரகம் மட்டும் தேன் கலந்த சுண்ணாம்பால் கட்டப்பட்டது என்று இக்கோவிலில் உள்ள கல்வெட்டுகள் கூறுகிறார்கள்.
திருக்கோவில் தலமரம் வன்னி. தலத் தீர்த்தமான பிரம்ம தீர்த்தம் கோவிலில் கீழ்ப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பல சிறப்புகள் கொண்ட இந்த ஆலயத்தை தரிசிக்க மறுபிறவி இல்லாதவர்களால் மட்டுமே முடியும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2