/* */

எப்படி நீராட வேண்டும் சொன்னது குறுமுனி அகத்தியர்

தற்போதைய தலைமுறைக்கு தெரிய வாய்ப்பு குறைவு.

HIGHLIGHTS

எப்படி நீராட வேண்டும் சொன்னது குறுமுனி அகத்தியர்
X

எப்படி நீராட வேண்டும் சொன்னது குறுமுனி அகத்தியர்

ஒருவர் எப்படி நீராட வேண்டும் என்பது பற்றி அகத்தியர் சில விஷயங்களை தெளிவுபடுத்தியுள்ளது தற்போதைய தலைமுறைக்கு தெரிய வாய்ப்பு குறைவுதான். இருந்தாலும் அதனை சொல்வது தம் கடமை..

நாம் குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கிதான் நின்று குளிக்கவேண்டும். இத்திசைகள் இரண்டும் உத்தம திசைகள். கர்ம சாரியங்கள் செய்த பின்னரும் மயானத்திற்கு சென்று வந்தால் மட்டும் தெற்கு நோக்கி நின்று குளிக்கவேண்டும்.மேற்கு திசை நோக்கி நின்று குளித்தால் உடல் வலி வந்து சேருமாம்.

ஒவ்வொருவரும் தினமும் கங்கா ஸ்நானம் செய்ய நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான் தினமும் குளிப்பதற்கு முன்பாக முன் ஒரு குவளை தண்ணீரில் மோதிரவிரலால் 'ஓம்' என்று தியானம் செய்து எழுதுங்கள். அந்நீர் அப்போது முதல் கங்கை நீராக மாறிவிடுமாம். ஒரு நிமிட தியானத்தில் 'இந்த மானுட உடலுக்குள் நீங்களே வந்திருந்து, இதை உங்களுக்கு செய்யும் அபிஷேகமாக ஏற்றுக்கொள்ளுங்கள்' என்று இறைவனை வேண்டிக்கொள்ள வேண்டும்.

அக்னி எப்போதும் மேல்நோக்கியே பயணிக்கும் உடலுக்குள் இருக்கும் அக்னி கீழிருந்து மேல் ஏறுவதுதான் சரியானது. ஆதலால் தண்ணீரை கால் முதல் மேல் நோக்கி நனைத்து வந்து, கடைசியில் தலையில் ஊற்றிக் கொள்ளவேண்டுமாம். நமது தலைக்கு உக்கிர அக்னியின் வேகத்தையும் தாங்குகின்ற சக்தி உண்டு. காலில் இருந்து பரவும் குளிர்ச்சி, மேல் நோக்கி பயணிக்கும் போது உள்அக்னி தலையை நோக்கி பயணிக்கும்.

தலை முதல் கால் வரை உள்ள பின் பாகத்தை 'பிரஷ்டம்' என்றழைப்பார்கள். அதில் நம் முதுகு பாகம் தான் மிகப்பெரியது. அப்பகுதியில் அக்னியின் வேகம் கூடுதலாக பரவும் குளித்து முடித்தவுடன், முதலில் முதுகு பாகத்தைத் தான் துடைக்க வேண்டுமாம். குளித்து முடித்ததும் உடலை சுத்தம் செய்ய, நம்மில் பலரும் ஈரம் படாத துண்டைத் தான் உபயோகிப்பார்கள். ஆனால் அது சரியனது அல்ல...குளிக்கும் நீரிலேயே துண்டை நனைத்துப் பிழிந்து துவட்டுவதுதான் சால்சிறந்தது. உலர்ந்த துணியானது உள் சூட்டை வேகமாகப் பரவச் செய்து, பலவித உள் வலிகளை ஏற்படுத்துமாம்.

பிறருடன் வாய்திறந்து பேசக்கூடாத மூன்று நேரங்களில் ஒன்று, குளியல் மவுனத்தை கடைப் பிடிக்க வேண்டும். அல்லது மனதளவில் இறைவனின் ஜெபத்தை உச்சரிக்கலாம்.

பஞ்ச இந்திரியங்களால் செய்த தவறுகளினால், நமக்குள் சேர்த்து வைத்துள்ள கர்மாக்கள், குளிப்பதன் மூலமாக களையப்படுவதாக வரலாறு கூறுகின்றது.

குளிக்கும் போது, வாயில் கொள்ளளவு நீரை வைத்து குளித்தபின் துப்புவதால், கழுத்துக்கு மேல் வருகிற நீர் சம்பந்தமான கட்டுகளை, நோய்களை தவிர்க்கலாம். வாயில் இருக்கும் நீர் மேல் நோக்கி எழும்பும் அக்னியின் வேகத்தை கட்டுப்படுத்துமாம்.

குளம், ஆறு, கடல் போன்ற நீர்நிலைகளில் எல்லா தேவதைகளும், பெரியவர்களும் அரூபமாக ஸ்நானம் செய்வதாக கூறுகிறார்கள். 'நாரம்' என்கிற தண்ணீரில் நாராயணன் வாசம் செய்வதாகவும் சொல்வார்கள். ஆதலால் ஓடிச் சென்று அதில் குதிக்காமல், கரையில் நின்று, சிறிது நீரை எடுத்து தலையில் தெளித்தபின், நீர் கலங்காமல், ஒரு இலை நீரில் விழுகிற வேகத்தில் மெதுவாக இறங்கி சென்று குளிக்கவேண்டுமாம்.

நீரில் காரி உமிழ்வதோ, துப்புவதோக் கூடாது. நீரின்றி ஒரு உயிரும் இல்லை. நீரை விரயம் செய்வதால், கடன் அதிகரிக்கும். உப்பு நீர் ஸ்நானம் திருஷ்டி தோஷங்களை அறுக்கும்.

Updated On: 9 May 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  2. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  5. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  6. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  8. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  9. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு