kovil puliyodharai recipe tamil-கோவில் புளியோதரைக்கு தனி ருசி உண்டு..! எப்படி செய்யலாம்..? தெரிஞ்சுக்கங்க..!
பொதுவாகவே கோவிலில் கொடுக்கப்படும் அன்னதானம் முதல், புளியோதரை, பொங்கல் வரை எல்லா பிரசாதங்களுக்கும் ஒரு தனி சுவை வந்துவிடுகிறது.
HIGHLIGHTS
kovil puliyodharai, kovil puliyodharai recipe tamil, kovil style puliyodharai in tamil
அது என்ன மாயமோ தெரியாது கோவில்களில் வழங்கப்படும் புளியோதரைக்கு தனிச் சுவை உள்ளது. பொதுவாகவே இந்த செய்முறைக்கு ஐயங்கார் புளியோதரை என்று சொல்கிறார்கள். கோவிலில் சாப்பிடும் புளியோதரை என்பதால் அது தெய்வீக சுவையாக இருக்கிறது.
எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் கோவிலில் தரும் புளியோதரைக்கு அடிமையானவர்கள் எவ்வளோ பேர் உள்ளனர். சிறுபிள்ளைபோல வரிசையில் நின்று வாங்கிச் சுவைப்போரும் உள்ளனர். கோவில் முறை புளியோதரை செய்யும் முறை, வீடுகளில் செய்யும் புளியோதரையில் இருந்து சற்று வேறுபட்டதாகும். அதை இங்கு பார்ப்போம் வாங்க.
தேவையான பொருட்கள்
1 எலுமிச்சை அளவு புளி
½ தேக்கரண்டி மஞ்சள் தூள்
2 சிவப்பு மிளகாய்
¼ தேக்கரண்டி பெருங்காயம்
உப்பு தேவைக்கு ஏற்ப
1 டீஸ்பூன் வெல்லம் துருவியது
அரைப்பதற்கான பொருட்கள்
1 தேக்கரண்டி எண்ணெய்
2 டீஸ்பூன் கொத்தமல்லி
6 சிவப்பு மிளகாய்
1 டீஸ்பூன் கடலப்பருப்பு
2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
½ தேக்கரண்டி வெந்தயம்
1 தேக்கரண்டி மிளகுத்தூள்
2 தேக்கரண்டி எள் - இவைகளை அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.
தாளிப்பதற்கான பொருட்கள்
2 டீஸ்பூன் நல்லெண்ணெய்
1 தேக்கரண்டி கடுகு
2 தேக்கரண்டி கடலப்பருப்பு
1 டீஸ்பூன் வறுத்த வேர்க்கடலை
1 முஷ்டி கறிவேப்பிலை
செய்முறை
புளியை 1 கப் தண்ணீரில் ஊறவைத்து நன்றாக கரைத்து சக்கையை எடுத்துவிட்டு தனியாக வைக்கவும்
வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடானவுடன் , எள் தவிர மற்ற அரைத்த பொருட்களைச் சேர்த்து, பருப்பு பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
கடைசியாக எள்ளைச் சேர்த்து 30 விநாடிகள் வறுக்கவும். வறுத்த பொருட்களை அடுப்பில் இருந்து இறக்கிவைத்து ஆறவிடவும். எள் கடைசியாக சேர்ப்பதன் காரணம், பருப்பை வறுக்க முயற்சிக்கும்போது எள் கருகிவிடும். எனவே இது எப்போதும் எள் கடைசியாக சேர்க்கப்பட வேண்டும்.
வறுத்து ஆறிய பொருட்களை மிக்ஸியில் போட்டு மிருதுவாக அரைக்கவும்
வாணலியில் எண்ணெயை சூடாக்கி, எண்ணெய் சூடானதும் கடுகு சேர்க்கவும். கடுகு பொரிய ஆரம்பித்ததும், கடலை பருப்பு மற்றும் வேர்க்கடலை போன்றவைகளைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
அடுத்து உடைத்த சிவப்பு மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து மேலும் 20 நொடிகள் வதக்கவும்
பிறகு பிரித்தெடுத்த கெட்டியான புளிச் சாறு சேர்த்து மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்
புளியின் பச்சை வாசனையை போக்க புளி கலவையை குறைந்தது 5 நிமிடங்களுக்கு நன்றாக கொதிக்க விடவும்.
இப்போது அரைத்த தூள் சேர்த்து நன்கு கலக்கினால் கட்டிகள் நீங்கும். அடுப்பில் தணலை மிதமாக வைத்து, புளியோதரை கலவையை நன்கு கொதிக்க வைத்து, கெட்டியாக வையுங்கள்.
புளியோதரை கலவை கெட்டியானதும் வெல்லம் சேர்த்து நன்கு கிளறி, புளியோதரையை அடுப்பிலிருந்து இறக்கவும்.
புளியோதரை கலவையை காற்றுப் புகாத பாட்டில் அல்லது டப்பாக்களில் போட்டு குளிர்சாதன பெட்டியில் வைத்து 2-4 நாட்களுக்கு பயன்படுத்தலாம். நாம் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கத் திட்டமிட்டால், நல்லெண்ணெயை கூடுதலாக பயன்படுத்தவேண்டும்.
சமைத்து ஆற வைத்துள்ள சோற்றை புளியோதரை கலவை மற்றும் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து, கலக்கவும். நல்லெண்ணெய் சேர்ப்பதால் சாதம் ஒன்றுக்கொன்று ஒட்டாமல் இருக்கும்.
இதோ சுவையான, காரமான கோவில் புளியோதரை நெய்வேத்தியத்திற்கும் பரிமாறுவதற்கும் தயாராகிடிச்சி.