/* */

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை..!

Husband and Wife Love Quotes in Tamil-கணவன்-மனைவி; மனைவி-கணவன் என்பது இரண்டு சக்கரத்தேர். காலச் சாலைகளில் பயணிக்கும் காதல் வாகனம்.

HIGHLIGHTS

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை..!
X

Husband and Wife Love Quotes in Tamil

கணவன் மனைவி உறவு என்பது இலை மேல் தெளித்த தண்ணீர் அல்ல. அது கற்பாறைகளாய் இருக்கமுற்ற அன்பு. ஒரு வாழ்க்கையின் ஆணிவேர் கணவன்-மனைவி. ஆமாம், அவர்கள் மூலமாக சந்ததிகள் தொடரவேண்டும். அந்த உறவு துன்பத்திலும் இன்பத்திலும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காத உயர்ந்த உறவு. மலர்களுக்குள் இருக்கும் வாசனை போன்றது, கணவன்-மனைவி உறவு.

அப்படி வாழும் கணவன்-மனைவி பற்றிய மேற்கோள்களை பார்ப்போம் வாங்க.

ஒரு நல்ல கணவனின் அன்பு ஆயிரம் தாய்களுக்கு சமம்.

நேரத்துக்கு வீட்டுக்கு வரவில்லையெனில் சண்டை போடுவேன். அது உன் வருகைக்கான என் ஏமாற்றத்தின் வெளிப்பாடு..! சில நொடிகள் கோபம்..அடுத்த நொடி அணைப்பு..! இதுதான் காதல்..!

மனைவியைத் தாங்கும் கணவன், கணவனிடம் எதையும் மறைக்காத மனைவி, நண்பர்கள் போன்ற பிள்ளைகள் அமைந்துவிட்டால் வாழ்க்கை என்றும் சொர்க்கமே..!

மனைவி உருப்பெற்றது தாயின் கருவறை எனினும் கணவனின் இதயம் இரண்டாவது கருவறை.

Husband and Wife Love Quotes in Tamil

அன்புக்கு கண்டுண்ட காளையாக மனைவியின் சொல்லுக்கு கட்டுப்படும் கணவன் எல்லாம் பொண்டாட்டிதாசன் அல்ல. அவனே ஆளுமையின் அடையாளம். ஒரு பெண்ணை முழுமையாக ஆளத்தெரிந்தவன்.

நோயுற்றபோதும் கைவிடாது, குழவியற்றபோதும் நீ எனக்கும்; நான் உனக்கும் குழந்தைதான் என்று வாழும் தம்பதிக்கு வாழ்நாள் முழுதும் இன்பமே..எந்நாளும் துன்பமில்லை..!

வாழ்வையுணர்ந்த பெண் மனம் காசு பணம் தேடாது..! உண்மை அன்புக்கு அடிபணியும். கூரை இல்லா வீடு எனினும் கூத்தாடும் (மகிழ்ச்சி) மனம் இருக்கும். சொந்தபந்தம் சேர்ந்து இருக்கும்.

எத்தனை சொந்தங்கள் இருந்தாலும் ஓர் ஆணுக்கு மனைவிதான் மூச்சுக்காற்று. ஓர் பெண்ணுக்கு கணவன் தான் சுவாசம். அதற்கு இணை வேறேதும் இல்லை. விழுதுகள் மரத்தை தாங்கலாம் வேர் மட்டுமே அதை வாழவைக்க முடியும். கணவன் மனைவி எனும் உறவும் இதைப்போல தான்.

Husband and Wife Love Quotes in Tamil

ஒரு பெண்ணுக்கு குழந்தையை கொடுப்பது மட்டுமே ஆண்மை அல்ல. கஷ்ட்டத்தில் கைகொடுத்து, துன்பத்தில் தோள் கொடுத்து நிற்பவனே உண்மையான ஆண்மகன்.

கணவனின் சிறந்த தோழியாக மனைவியும், மனைவியின் சிறந்த தோழனாக கணவனும் இருந்துவிட்டால் வாழ்க்கை என்றும் சிறுபிராயத்து மகிழ்ச்சிதான்.

நான் உயிரோடு இருப்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் என் உயிர் உன்னோடு இருப்பது யாருக்கு தெரியும் உன்னை தவிர.

சண்டை முடிந்து சமாதானம் ஆகி, ஆயிரம் முறை சண்டையிட்டேன். உன்னோடு பேசாமல் இருந்து விட்டு சமாதானம் ஆகும் அந்த தருணம் புதிதாய் காதலிப்பது போலவே இருக்கிறது. ஆதலினால் சண்டையிடுவோம் வாடா..புருஷா..!

நான் உன்னை நேசிப்பது உன்னோடு வாழ்வதற்கு மட்டுமல்ல உனக்காக மட்டுமே வாழ்வதற்கு.

Husband and Wife Love Quotes in Tamil

உன்னைவிட யாரெவரும் எனைத்தாங்க இப்புவியில் யாருமிலை..உன்னைவிட யாரெவரும் அன்புகொள்ள பிறக்கப் போவதில்லையடா..என் புருஷா..! இளமையின் ரகசியத்தை ஆய்வு செய்யுங்கள்.

அன்பின் உறவுக்கு உரிமையும் அதிகம். அதனால் சண்டையும் அதிகம் இருக்கும். அது உரிமை மீறல் அல்ல. அன்பின் அதீதம்..!

அடிக்கடி உன்னிடம் சண்டை போடும் இந்த இளம் இதயத்தை விட்டு விடாதே, என்னைவிட உன்னை யாரும் நேசித்து விட முடியாது.

எந்த உறவாக இருந்தாலும் சின்ன சுயநலம் கலந்து இருக்கும். சுயநலம் இல்லாமல் நம்மை காக்கும் ஓர் உறவு, கணவன் மட்டுமே.

என் திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படவில்லை. ஏனெனில் நீ என்னை திருமணம் செய்ததால்தான் என் வாழ்வு சொர்கமாக்கப்பட்டுள்ளது..!

Husband and Wife Love Quotes in Tamil

தன் பிரசவ மயக்கம் தெளிந்ததும், ஒரு பெண் முதலில் பார்க்க விரும்புவது தன் முதல் குழந்தையாகிய அவள் கணவனையே. மாயக்கண்ணன் அவன்தானே..!

நீ என்னை உறவாகத் தான் நினைக்கிறாய்.. நான் உன்னை என் உயிராகவே நினைக்கிறேன்.. உயிர் இன்றி உடல் வாழுமா சொல்?

ஆண் எதிர்பார்ப்பது தன்மீது அன்பாயிருக்கும் மனைவியை. பெண் எதிர்பார்ப்பது தன்மீது மட்டும் அன்பாயிருக்கும் கணவனை.

நாம் உள்ளத்தில் நினைக்கின்ற ஒன்றை நாம் கூறாமலே புரிந்து கொள்ளும் உறவுகளை நம் வாழ்வில் பெறுவது வரமே.

இந்த ஜென்மம் மட்டுமல்ல இன்னும் ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும் எனக்கு நீ தான் உனக்கு நான் தான்.

Husband and Wife Love Quotes in Tamil

ஆண்டவனிடம் நான் ஒரு வரம் கேட்டேன். 'என்னவளை நான் ஒவ்வொரு முறையும் நினைக்கும்போது ஒவ்வொரு நட்சத்திரத்தை படைக்கவேண்டும் என்றேன். என்னவளே, வெளியே வந்து பார். உன்னை எவ்வளவு முறை நினைத்திருக்கிறேன் என்று இந்த நட்சத்திரங்களை எண்ணிப்பார்.

விலை உயர்ந்த பொருட்கள் வேண்டாம். பகட்டாக துணிகள் வேண்டாம். மனைவிக்காக விலை உயர்ந்த ஒரே பொருள் அன்பான வார்த்தைகளே. நேரம் ஒதுக்கி பேசுங்கள்..மீண்டும் காதலியுங்கள்..! ஒரு கணவன் தன் மனைவிக்கு விலை உயர்ந்ததாக எதையாச்சும் கொடுக்க நினைத்தால் தினமும் மனைவிக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கி அன்பா ஆதரவா அரவணைப்பா பேசுங்கள் அத விட உங்க மனைவி எதையும் எதிர் பாக்கமாட்டாங்க... உங்கள தாண்டி எதையும் யோசிக்ககூட மாட்டாங்க...

உரிமையை தந்து விட்டு அன்பை வெளிப்படுத்த மாட்டான் ஆண். ஆனால் சின்னச் சின்ன விஷயங்களிலும் அன்பை எதிர்பார்ப்பவள் பெண்.அதனால் அன்பு செய்வோம்..!

Husband and Wife Love Quotes in Tamil

சண்டை வந்தா சமாதானம் பண்ணலாம் ஆனால், சமாதானம் பண்ணுவதற்காகவே சண்டையிடும் என்னவன் அழகுதானே..?

உன் மீதான என் அன்பு ஒரு குழந்தை தன் தாய் மீது வைத்திருக்கும் அன்பைப் போன்றது. அதற்கு உன்னைத் தவிர வேறொன்றும் தெரியாதுடா...

நேசிக்கும் பெண்ணை அழ விடாமல் பார்த்துக்கொள்ளும் ஆண்கிடைப்பது, மீண்டும் ஒரு தாய் கிடைத்ததற்கு ஒப்பாகும்.

உயிரே, நீ எனக்கு வரவாக வந்த உறவு அல்ல..! எனக்கு வரமாக கிடைத்த உயிர்..!

சண்டை,பாசம், கோபம், அழுகை, புன்னகை இதில் எது என்றாலும் சம்மதம் அது உனக்காக என்றால் மட்டும்.

எனக்கான சிறிய உலகத்தில் நான் அமைத்துக் கொண்ட மிகப்பெரிய உறவு நீ, என் அன்பின் அதீத புருஷா..!

Husband and Wife Love Quotes in Tamil

தொலைத்தால் கிடைக்கும் பொருள் அல்ல அன்பு..! எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் கிடைக்காத பொக்கிஷம் உன் அன்பு.

கனவுகளோடு காத்திருக்கும் என் விழிகளுக்கு எப்போது விருந்தளிக்கும் உன் விழிகள்...

நினைத்து கூட பார்க்கவில்லை நீ கிடைப்பாய் என்று. கிடைத்தவுடன் நினைத்து கொண்டேன் நானும் அதிர்ஷ்டசாலி என்று

என் காதலும் என் கண்ணீரும் உன் ஒருவனுக்கு மட்டுமே சொந்தம்...

சண்டை இட்ட அடுத்த நொடி வந்து மன்னிப்பு கேட்பதை விட, மார்பில் சாய்த்து கோபமா ? என்று கேட்கும் துணை தானே வாழ்வின் பேரானந்தம்.

கணவன் மனைவி என்பவர் நீயா..? நானா..? என்று வாழ்க்கை நடத்துவதைவிட நீயும் நானும், நாமே என்று வாழ்க்கை நடத்தினால் இல்லறம் அர்த்தமுள்ளதாகும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 6 March 2024 7:06 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்