/* */

போலிமுகத்தினைக் காட்டும் உறவுகள் பற்றி தெரியுமா?..... படிச்சு பாருங்க...

Fake Relationship Quotes Tamil-உறவுகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம். இதுபோல் உள்ஒன்று வைத்து புறம் ஒன்று பேசும் போலி உறவுகளைப் பற்றிப் பார்ப்போமா?

HIGHLIGHTS

Fake Relationship Quotes Tamil
X

Fake Relationship Quotes Tamil


Fake Relationship Quotes Tamil-வாழ்க்கை என்பது அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும்.கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை எதிலும் கலப்படம் இல்லை. யாருக்குமே பண ஆசை இல்லை. சுயநலம் இல்லை. மற்றவர்களின் பிரச்னைகளை தாமாகவே முன்வந்து அர்ப்பணிப்போடு செய்து தந்த காலம் இது. மற்றவர்கள் கஷ்டப்பட்டாலும் அவர்களாகவே ஓடி வந்து உதவி செய்தனர். பிரதி உபகாரம் பார்க்காமல்.

ஆனால் கடந்த 10 வருடங்களாக சமூகமே தலைகீழாக மாறிவிட்டதைப்போல் ஒரு பிரம்மை. காரணம் அதீத வளர்ச்சி. அதாவது நாடு ஒருபுறம் தொழில்நுட்ப வளர்ச்சியைக் கண்டாலும் சீக்கிரம் நாம் பணக்காரனாகிவிடவேண்டும் என்ற நப்பாசையில் பலர் வழி மாறத்துவங்கினர். ஒரு சிலகுடும்பங்களில் உறவுகளே போலி வேடமிட்டு சொத்துகளை நாசம் செய்தது வேறு கதை. அந்த அளவிற்கு உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசும் உலகமாகப்போய்விட்டது.

அவர்களுக்கான காரியம் ஆக வேண்டும் என்றால் நம்மைச்சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். அவர்களுடைய காரியம் ஆனதும் காக்கா கூட்டம் போல் அனைத்தும் பறந்து போய்விடும். நாம் தனிமைப்படுத்தப்படுவோம். இதுதாங்க இன்றைய வாழ்க்கை...

மனிதர்களாகப்பிறக்கும்போதே பல உறவுகள் உருவாகி விடுகிறது.இந்த உறவுகள் அனைத்தும் நம் வாழ்நாளில் பெருகி பரந்து விரிந்து விடுவதோடு நம் இறுதிக்காலத்தில் உறவுகளின் முடிச்சு வலிமையாகி விடுகிறது என்பதை நம் வாழ்நாளில் நாம் கண் கூடாக காண்கிறோம்.

உறவுகள் அனைத்தும் நிஜமா? உண்மையில் உறவுகள் நிஜ பாசத்தோடு பழகுகிறார்களா? அல்லது போலி பாசத்தினால் உறவுகளை தொடர்கிறார்களா? என்பது நமக்கு நாள் பட நாள் படவே புரியும். தெரியும் ., இந்த காலத்தினைப்பொறுத்தவரை உறவுகள் அனைத்தும் துாரத்தினையே மெயின்டெயின் செய்கின்றனர். கல்யாணம், காட்சி என்றால் மட்டுமே தலைக்காட்டி விட்டு பின்னர் நல்லது கெட்டதுக்கு மட்டும் தலைக்காட்டுவர். நடுவில் எந்த பேச்சும்இருக்காது. அக்கால உறவுகள் வலிமையானவை . போலிகள் என்பதை காண முடியாது. மனதில் பட்டதை பேசும் குணம் கொண்டவர்களாக இருந்தார்கள். ஆனால் இக்கால உறவுகள் அனைத்துமே உதட்டில் ஒன்று மனதில் ஒன்று வைத்து பேசுவதினால்தான் சிக்கலே.

பொருட்களில் போலிகளை நாம் பார்த்திருக்கிறோம். அதாவது ஒன்று சொல்லப்போனால் உண்மை ஒன்று உண்டு என்றால் போலி ஒன்று இருக்கவே செய்யும். அதனை நாம்தான் கண்டுபிடித்து அதனை விரும்பாமல் உண்மையை மட்டும் விரும்பி எடுக்க வேண்டும். இதுபோன்ற போலிகள் நடமாட்டம் தற்போது நாட்டில் பெருகிவருகிறது. அதாவது ஒரே மனிதர்களுக்கு இருமுகங்கள். போலி ஒன்று நிஜம் ஒன்று. மாற்றிப்பேசிவிட்டால் நிச்சயம் நாம் மாட்டிக்கொள்கிறோம். எனவே பேசும்போது இடம், பொருள், ஏவல் அறிந்து பேசுங்கள்.....

அர்த்தமுள்ள வரிகள் தமிழில் காண்போம்.

*துரோகத்தின் முதல் விதை அதிகபட்ச நம்பிக்கையால்தான் துாவப்படுகிறது.

*போலியானவர்கள் உங்களைப் பற்றி உங்களுக்கு முன்னால் நல்லதும் உங்களுக்கு பின்னால் கெட்டதும் பேசுவார்கள்.

*உங்கள் வாழ்க்கை போலி மனிதர்களால் நிறைந்திருக்கும்போது யாருக்கும் எதிரி தேவை.

* ஒருவரை மன்னித்துவிடும் அளவிற்கு நல்லவராக இருங்க.. ஆனால் அவரை மீண்டும் நம்புமளவிற்கு முட்டாளாக இருக்காதீர்கள்.

*நீ கேட்டு வாங்கும் அ ன்பு கடைசி வரை வருவதில்லை

*நிரந்தரம் இல்லாத உலகம், யாரும் யாருக்காகவும் இல்லை என்பது மட்டும் நிஜம்

*சில உறவுகள் நம்முடன்இருப்பதை விட விலகிச்செல்வதே நல்லது

*தாகம் தீரும் வரை தான் நீருக்கு மதிப்புஇருக்கும். சில உறவுகளுக்கு தேவை இருக்கும் வரை தான் பாசமும் இருக்கும்

*தனிமையானது..... எதை புரிய வைக்குதோ இல்லையோ இவ்வளவு நாள் எவ்வளவு பெரிய முட்டாளா இருந்து இருக்கோம்னு புரிய வச்சுடுது.

*உன்னிடம் அன்பாக பேசும் அ னைவருமே, உண்மையாக உன் மீது அன்பு வைத்துள்ளார்கள் என நினைக்காதே ... அந்த போலி அன்பிற்கு பின்னால் அவர்களுக்கான தேவை உன்னிடம் இருக்கிறது என்பதை நீ மறந்துவிடாதே.

*நேசிக்க தெரியாத மனிதர்களிடம் நேசத்தை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

*நம்ம மனசாட்சிக்கு நாம நல்லவங்களா தெரிஞ்சா போதும் எல்லோருக்கும் நிரூபித்து காட்டவேண்டும் என்ற அவசியம் இல்லை.

*ஒருவரை மன்னித்துவிடும் அளவிற்கு நல்லவராக இருங்க. ஆனால் அவரை மீண்டும் நம்புமளவிற்கு முட்டாளாக இருக்காதீர்கள்.

*அத்தனை அன்பும் பொய்தான் என்று தெரிய வரும்போது, அத்தனை நாள் பழக்கமும் அரை நொடியில் அர்த்தமற்று போகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 25 March 2024 9:16 AM GMT

Related News