சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி யு.யு. லலித் இன்று பதவியேற்பு
supreme court chief justice as taken charge சுப்ரீம் கோர்ட் தலைமைநீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள யு.யு. லலித் க்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிபிரமாணம் செய்துவைத்தார்.
HIGHLIGHTS
supreme court chief justice as taken charge
சுப்ரீம் கோர்ட் 49 வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
புதுடில்லி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
நேற்று முன்னாள் தலைமைநீதிபதி என்.வி. ரமணா நேற்றோடு ஓய்வு பெற்றதையடுத்து நேற்று அவருடைய தலைமையிலான அமர்வு நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. நேற்றோடு பணி முடிந்து விடைபெற்றார் என்.வி. ரமணா. இவர் 48 வது தலைமைநீதிபதியாக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
இன்று 49 வது தலைமை நீதிபதியாக யு.யு. லலித் நியமிக்கப்பட்டதையடுத்து இவர் பொறுப்பேற்றுக்கொண்டார்.
தலைமை நீதிபதி யு.யு. லலித்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி, முக்கிய தலைவர்கள் , நீதிபதிகள் கலந்துகொண்டனர்.
தற்போது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றிருக்கும் யு.யு. லலித் மகாராஷ்டிர மாநிலத்தினைச் சேர்ந்தவர் ஆவார். இவர் 1983 ம் ஆண்டு தன்னுடைய வக்கீல் பணியினைத் துவக்கினார். இவர் பிறந்த ஆண்டு 1957 என்பதால் இவர் 74 நாட்கள் மட்டுமே தலைமை நீதிபதி பதவியில் இருப்பார். நவம்பர் மாதம் 8 ந்தேதி பணி ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.