Begin typing your search above and press return to search.
தொடர் தோல்வி: காங்கிரஸ் தலைவர்கள் 3 பேர் ராஜினாமாவா ?
காங்கிரஸ் கட்சி பொறுப்புகளில் இருந்து சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ராஜினாமா செய்ய முன்வரலாம் என தகவல்.
HIGHLIGHTS
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது. படுதோல்வியை சந்தித்ததோடு, அக்கட்சியின் வாக்கு சதவிகிதமும் குறைந்திருப்பது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர் தோல்விக்கு பொறுப்பேற்கும் வகையில், காங்கிரஸ் கட்சி பொறுப்புகளில் இருந்து சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ராஜினாமா செய்ய முன்வரலாம் என்று என்.டி.டிவி செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து நாளை நடைபெறும் காங்கிரஸ் செயற்குழுவில் அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.