/* */

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வருக்கு 4 ஆண்டு சிறை

சொத்துக் குவிப்பு வழக்கில், ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

HIGHLIGHTS

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வருக்கு 4 ஆண்டு சிறை
X

ஓம் பிரகாஷ் சவுதாலா 

ஹரியானாவில், முதலமைச்சராக இருந்தவர், ஓம் பிரகாஷ் சவுதாலா. இவர், முன்னாள் துணை பிரதமர் தேவிலாலின் மகன். ஓம் பிரகாஷ் சவுதாலாவின் இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் ஆட்சி காலத்தில், 1993 ஆம் ஆண்டு முதல், 2006 ஆம் ஆண்டு வரை, முறைகேடாக ரூ.6.09 கோடி சொத்து சேர்த்ததாக, சவுதாலா மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கில், சவுதாலாவுக்கு எதிராக கடந்த 2010 மார்ச் 26ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில், சவுதாலா குற்றவாளி என்று, டெல்லியின் ரோஸ் அவென்யூ நீதிமன்றம்,கடந்த வாரம் தீர்ப்பு அளித்தது.

இந்த நிலையில், சவுதாலாவுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஓம் பிரகாஷ் சவுதலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ. 50லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Updated On: 27 May 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!