Begin typing your search above and press return to search.
பா.ஜ.க. துணை ஜனாதிபதி வேட்பாளராக ஜக்தீப் தன்கர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பா.ஜ.க. துணை ஜனாதிபதி வேட்பாளராக ஜக்தீப் தன்கர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
HIGHLIGHTS
நடைபெற உள்ள இந்திய ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்மு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது துணை ஜனாதிபதி வேட்பாளராக ஜக்தீப் தன்கர் அறிவிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் இன்று நடைபெற்ற பா.ஜ.க. வின் ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜக்தீப் தன்கர் தற்போது மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுனராக உள்ளார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். அம்மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினராக ஏற்கனவே இருந்த இவர் மத்திய இணை அமைச்சராகவும் பதவி வகித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.