Begin typing your search above and press return to search.
ஜம்முகாஷ்மீரில் சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு
ஜம்முகாஷ்மீரில் சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவாவின் ஹிரானகர் துறையில் சர்வதேச எல்லையில் ஒரு சுரங்கப்பாதையை எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்) கண்டறிந்துள்ளது. கத்துவாவின் ஹிரானகர் துறையில் ஐபி உடன் கண்டறியப்பட்ட சுரங்கப்பாதை சுமார் 150 மீட்டர் நீளம் கொண்டது. மேலும் திட்டமிட்டு இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இது பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்ப பாகிஸ்தானின் திட்டமிட்ட முயற்சி என்றும் இந்த சுரங்கப்பாதை சமீபத்தில் பயன்படுத்தப்படவில்லை என்று பிஎஸ்எப் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.