/* */

Crime news tamil-பாலினம் கண்டறிந்து கருக்கலைப்பு செய்த கும்பல் கைது : இது தருமபுரி அதிர்ச்சி..!

கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என கண்டறிந்து கருக்கலைப்புச் செய்த பழைய பெண் குற்றவாளி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

Crime news tamil-பாலினம் கண்டறிந்து கருக்கலைப்பு செய்த கும்பல் கைது : இது தருமபுரி அதிர்ச்சி..!
X

Crime news tamil-கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என கண்டறிந்து சட்டவிரோத கருக்கலைப்பு செய்தவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த ஸ்கேன் இயந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டது.

Crime news tamil

இதற்கு முன்பும் தர்மபுரி பகுதியில் குழந்தை பிறந்ததும் பாலினத்தை கண்டறிந்தவுடன் சிசுக்கொலைகள் நடந்து வந்தன. இந் நிலையில், தற்போது தொழிநுட்பம் வளர்ச்சி பெற்றுள்ளதால் மிக எளிதாக கருவிலேயே பாலினத்தைக் கண்டறிந்து கொலை செய்யப்படும் சம்பவம் தருமபுரி பகுதியில் மீண்டும் அரங்கேறியுள்ளது.

Crime news tamil

இந்த அதிர்ச்சி தரும் சம்பவம் குறித்து பார்ப்போம் வாங்க.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே செம்மன்குழிமேடு என்ற கிராமத்தில் சட்டவிரோதமாக இடைத்தரகர் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை பரிசோதனையில் கண்டறிந்து, பெண்ணாக இருந்தால் கருக்கலைப்பு செய்யும் சட்ட விரோத செயல்கள் நடைப்பெற்று வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்க்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் சோதனை நடத்தியபோது காரிமங்கலம் அருகே இடைத்தரகர்களை வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் உள்ள சிசு ஆணா, பெண்ணா என கண்டறிந்து வந்த செவிலியர் உட்பட 5 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் சாந்தி தலைமையிலான மருத்துவர்கள் பாலசுப்ரமணியம், பாலாஜி அடங்கிய மருத்துவ குழுவினர் காரிமங்கலம் பேருந்து நிலையத்தில் கண்காணித்து வந்தனர்.

அப்பொழுது ஒரு ஆட்டோவில் ஆறு பெண்கள் ஏறி உள்ளனர். இதனை அறிந்த மருத்துவ குழுவினர் குழுவில் இருந்த இரண்டு பெண்களை பரிசோதனை செய்வதற்காக அவர்களுடன் அந்த ஆட்டோவில் அனுப்பி வைத்தனர்.

Crime news tamil

இதனைத் தொடர்ந்து மற்ற அதிகாரிகள் இரு சக்கர வாகனத்தில் ஆட்டோவைப் பின் தொடர்ந்து சென்றனர். இந்த ஆட்டோ காரிமங்கலம் அருகே உள்ள செம்மன்குழிமேடு கிராமத்தில் உள்ள சுபாஷ் (28) என்பவரின் வீட்டின் முன் நின்றது. அந்த பெண்கள் இறங்கி அந்த வீட்டிற்குள் சென்றனர். குழுவில் இருந்த இரண்டு பெண்களும் அவர்களுடன் அந்த வீட்டிற்குள் நுழைந்தனர். அதனைத் தொடர்ந்து சிறிது நேரம் கழித்து ஆட்டோ இருந்த வீட்டிற்குள் மருத்துவ குழுவினரும் சென்றனர்.

உள்ளே நுழைந்து சோதனை மேற்கொண்ட போது, அந்த வீட்டில் சட்டவிரோதமாக ஸ்கேன் மெஷின் வைத்து, தரையில் கர்ப்பிணி பெண்களை படுக்க வைத்து பரிசோதனை செய்துகொண்டிருப்பதை கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து சட்ட விரோதசெயலை செய்த அழகாபுரியை சேர்ந்த, தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிய கற்பகம் (38) என்பவர் இந்த சட்ட விரோத செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

அவர் 7 கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் இருக்கும் சிசு ஆணா, பெண்ணா என கண்டறிந்து பாலின பரிசோதனை செய்து போது கையும் களவுமாக பிடிபட்டார்.

Crime news tamil

இந்த பரிசோதனை செய்வதற்கு கர்ப்பிணி பெண்களிடம் ரூ. 12 ஆயிரம் கட்டணமாக வசூல் செய்துள்ளார். மேலும் இதில் கொடுமை என்னவென்றால் மருத்துவக் குழுவினர் அனுப்பிய, கர்ப்பம் இல்லாத பெண் ஒருவருக்கு பரிசோதனை செய்து மூன்று மாதம் கர்ப்பம் இருப்பதாகவும், அந்த கர்ப்பத்தை களைத்து விடலாம் எனவும் இந்த மெகா மிஸ்டேக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து இந்த சட்ட விரோத செயல்களை செய்து வந்த, கற்பகம், இதற்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் விஜயகுமார் (35), இடைத்தரகர் சிலம்பரசன் (31), ஆட்டோ ஓட்டுநர் செல்வராஜ் (35) வீட்டின் உரிமையாளர் சுபாஷ் (28) ஆகிய 5 பேரையும் பிடித்து காரிமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து காரிமங்கலம் காவல் துறையினர் சட்ட விரோதமாக கர்ப்பிணி பெண்களுக்கு பரிசோதனை செய்து வந்த கும்பலை கைது செய்து, அவர்களிடமிருந்த ஸ்கேன் இயந்திரம், 4 செல்போன்கள், 2 சொகுசு கார், 1 ஆட்டோ உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் காரிமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் தருமபுரி அடுத்த ராஜாப்பேட்டையில் ஆட்டோ டிரைவர் வெங்கடேசன் என்பவரது வீட்டில் சட்ட விரோதமாக கருவில் இருக்கும் சிசு ஆணா பெண்ணா என கண்டறிந்து, தற்போது கைதாகியுள்ள கற்பகம் கருக்கலைப்பு செய்ய, கர்ப்பப் பையில் மாத்திரையை வைத்துள்ளார். ஆனால் கரு கலைவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பது தெரிந்துள்ளது.

Crime news tamil

இதனால் செயற்கை முறையில், கர்ப்பப் பைக்குள் கை விட்டு, கற்பகம் குழந்தையை வெளியே இழுத்துள்ளார். ஆனால் குழந்தையின் தலை மட்டும் தனியாக வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்துவிட்டனர். ஆனால், இந்த தகவலை மறைத்து வனஜாவிற்கு தெரியப்படுத்தாமல், உடலில் இரத்தம் குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கருக்கலைப்பிற்காக பணம் பெறாமல், இவர்களே கார் வைத்து அழைத்து சென்று, வனஜாவின் வீட்டில் இறக்கிவிட்டு வந்துவிட்டனர்.

இந்நிலையில் நள்ளிரவில் வனஜாவிற்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகிரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அங்கு சோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை இறந்து தலை இல்லாமல் இருப்பதை கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட்ட மருத்துவத்துறை ஊரக பணிகள் இணை இயக்குனர் மூலம் தருமபுரி நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து வனஜா மற்றும் கற்பகம் செல்போன் நம்பரை வைத்து, காவல் துறையினர் விசாரணையை நடத்தினர்.

Crime news tamil

அப்பொழுது திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த சதீஸ்குமார் என்பவர், காரில் ஸ்கேன் இயந்திரத்தை எடுத்து வந்து, பரிசோதனை செய்து, சிசுவின் பாலினத்தை தெரிவித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு உடந்தையாக பல்வேறு இடைத்தரகர்கள் இருப்பதும், ஆட்டோ டிரைவர் வெங்கடேசன் அழைத்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

காவல் துறையினர் ராஜபேட்டையில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜோதி (33) சுதாகர்(37), தருமபுரியை சேர்ந்த கற்பகம்(38) ஆகியோர் எந்த மருத்துவ படிப்பும் படிக்காமல் ஸ்கேன் செய்து, சட்டத்திற்கு புறம்பாக கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை கண்டறிந்து, பெண் சிசுக்களை மட்டும் கருக்கலைப்பு செய்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.

தொடர்ந்து மேலும் பாலினம் கண்டறிய 6 கர்ப்பிணிகளை இடைத்தரகர்கள், சரிதா(40), குமார்(38), தருமபுரி செட்டிகரை பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வெங்கடேசன் (33) அழைத்து வந்திருந்தனர்.

இந்த இடைத்தரகர்கள் மூலம் பாலினம் கண்டறிய வரும் கர்ப்பிணிகள் சினிமா பாணியில் கண்களைக் கட்டி அழைத்துச் சென்று, வீட்டிற்குள் நுழைந்தவுடன் கண்கட்டை கழற்றிவிட்டு, பரிசோதனை முடிந்த பின்பு மீண்டும் கண்களை கட்டி அழைத்து வந்து விடுவார்களாம்.

Crime news tamil

அவ்வாறு கடந்த 2022ம் ஆண்டு கைது செய்யப்பட்ட கற்பகம் தற்பொழுது தொடர்ந்து மீண்டும் கருவைக்கண்டறிந்து கருக்கலைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். இதுவரை தருமபுரி மாவட்டத்தில் இரண்டு முறையும், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒருமுறையும் கற்பகம் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து இவர்களுக்கு இன்னும் சில பேர் உதவி செய்து வருகின்றனர். இது ஒரு சங்கிலித் தொடர் போன்று நீண்டு வருகிறது. இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும், யாரும் உதவி செய்யாமல் இருக்கவும் சட்டங்களை கடுமையாக நடைமுறைப்படுத்தினால் மட்டுமே இதனை தடுக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஒரு பழைய குற்றவாளி மீண்டும் தைரியமாக அதையே மீண்டும் செய்து வருகிறார் என்றால் நமது சட்டத்தை எப்படியும் ஏமாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையில்தானே அவர் செய்திருக்கவேண்டும். பணம் சம்பாதிப்பதற்கு எளிதான வழி என்று கருவில் வளரும் பிஞ்சுகளை அழிப்பது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை இனிமேல் அவர் உணரும்படி நமது சட்டம் தண்டிக்கவேண்டும்.

Updated On: 22 Sep 2023 10:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்