/* */

நடிகர் சூர்யா வீட்டுக்கு ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு

நடிகர் சூர்யாவின் சென்னை வீட்டிற்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நடிகர் சூர்யா வீட்டுக்கு ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு
X

 நடிகர் சூர்யா

நடிகர் சூர்யாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெய்பீம் படம், வரவேற்பை பெற்றது. எனினும், இதில் வன்னியர்களை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி, நடிகர் சூர்யாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

வன்னியர் சங்கம் தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. நடிகர் சூர்யா, ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் ஆகியோருக்கு எதிராக, அந்த அமைப்பு சார்பில், வக்கீல் நோட்டீசும் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, பாமக மற்றும் வன்னியர் சங்கம் தரப்பில், நடிகர் சூர்யாவுக்கு எதிரான கருத்துகள் வெளியான போதும், திரையுலக பிரபலங்கள், சில அரசியல் தலைவர்கள், நடிகர் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இச்சூழலில், நடிகர் சூர்யாவின் சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டிற்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தரப்பில் பாதுகாப்பு எதுவும் கேட்கப்படவில்லை என்றும், அதே நேரம், உளவுத்துறை தகவலின் அடிப்படையில், அரசே இந்த பாதுகாப்பை வழங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சூரியாவின் தந்தை நடிகர் சிவகுமார், தம்பி கார்த்தி ஆகியோரும், இதே வீட்டில்தான் குடும்பத்துடன் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Updated On: 17 Nov 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!