பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலிருந்து விலகும் கதிர்!
Pandian Stores Kumaran-சமீப நாட்களாக அதிக படங்களில் நடிப்பதையே அவர் விரும்புவதாகவும் இதனால் சீரியலிலிருந்து விலகப் போவதாகவும் கூறப்படுகிறது. இப்போது மாயத் தோட்டா எனும் இணையத் தொடரிலும் நடித்திருக்கிறார் குமரன்.
HIGHLIGHTS
Pandian Stores Kumaran-பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலிருந்து கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் குமரன் விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இரவு நேரங்களில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருக்கிறார் குமரன். சமீபத்தில் வதந்தி இணைய தொடரில் நடித்து புகழ் பெற்றவர் இவர்.
சமீப நாட்களாக அதிக படங்களில் நடிப்பதையே அவர் விரும்புவதாகவும் இதனால் சீரியலிலிருந்து விலகப் போவதாகவும் கூறப்படுகிறது. இப்போது மாயத் தோட்டா எனும் இணையத் தொடரிலும் நடித்திருக்கிறார் குமரன்.
சினிமாவுக்கும் அப்படியே ஓடிடி தொடர்களிலும் தொடர்ந்து நடிக்க வாய்ப்பு தேடி வருவதால் சீரியலிலிருந்து அவர் வெகு சீக்கிரம் ஒதுங்க வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள். பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் பலரும் கதிருக்காகத் தான் இந்த நாடகத்தை பார்த்து வருகிறார்கள். ஏற்கனவே முல்லை கதாபாத்திரத்தில் நடித்த சித்ரா இந்த தொடரில் நடித்துக் கொண்டிருக்கும்போதே மரணமடைய, அவருக்கு பின் வந்தவரும் விலகிவிட இப்போதுதான் புதிதாக முல்லையைத் தேர்ந்தெடுத்தார்கள். இப்போது கதிருக்கான வேட்டையும் நடந்து வருமோ என்னவோ.
இதுகுறித்து குமரன் தரப்பில் எந்த விளக்கமும் இல்லை என்பதால் இதை உண்மைச் செய்தியாகவும் கருதமுடியாது. அவர் தரப்பிலிருந்தோ அல்லது சீரியல் தரப்பிலிருந்தோ தகவல் வரும்வரை எதுவும் உண்மை இல்லை என்றே எடுத்துக் கொள்வோம்.
பாண்டியன் ஸ்டோர்ஸில் குமரனும் விஜே சித்ராவும் நன்றாக நடித்து வந்தார்கள். இருவரும் மிகச் சிறந்த பேர் என்றே பெயர் வாங்கினார்கள். அதேநேரம் இவர்களுக்காகவே சீரியல் பார்க்கும் மக்கள் ரசிகர்களாக மாறினார்கள். சீரியல் தாண்டி கலை நிகழ்ச்சிகள், விஜய் தொலைக்காட்சியின் இதர நிகழ்ச்சிகளிலும் இவர்கள் ஜோடியாக பங்கேற்றார்கள்.
இடையில் விஜே சித்ராவுக்கு பல பிரச்னைகள் வந்தன. குமரன் கூடவும் சில பிரச்னைகள் வந்ததாகவும் தகவல் வெளியானது. ஆனாலும் இருவரும் நல்ல நண்பர்களாகவே இருந்தார்கள். ஆனால் சொந்த வாழ்க்கை பிரச்னையில் தூக்கு மாட்டி மரணமடைந்துவிட்டார் விஜே சித்ரா. அதன் பிறகு இன்னொருவரை முல்லையாக கொண்டு வந்தார்கள். ஆனால் அவரை ரசிகர்கள் ஏற்கவில்லை. சமீப நாட்களாக அதிக படங்களில் நடிப்பதையே அவர் விரும்புவதாகவும் இதனால் சீரியலிலிருந்து விலகப் போவதாகவும் கூறப்படுகிறது. இப்போது மாயத் தோட்டா எனும் இணையத் தொடரிலும் நடித்திருக்கிறார் குமரன்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2