'மாமன்னன்' படக்குழுவினருடன் ஓணம் பண்டிகையைக் கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்..!
நடிகை கீர்த்தி சுரேஷ், இந்த ஆண்டின் ஓணம் பண்டிகையை 'மாமன்னன்' படக்குழுவினருடன் உற்சாகமாகக் கொண்டாடினார்
HIGHLIGHTS
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தங்கையாக நடித்த 'அண்ணாத்த' மற்றும் செல்வராகவனுடன் நடித்த 'சாணி காகிதம்' ஆகிய படங்கள்தான் இறுதியாக வெளியானவை.
இந்தநிலையில், தற்போது மீண்டும் தமிழில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துவரும் 'மாமன்னன்' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கி வரும் இப்படத்தில், வைகை புயல் வடிவேலு மீண்டும் நகைச்சுவை நடிகராக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
'மாமன்னன்' படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், கீர்த்தி சுரேஷ் இந்த வருட ஓணம் பண்டிகையை படக்குழுவினருடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் நாட்டில் பிறந்தவராக இருந்தாலும், கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.படக்குழுவினருடன் கீர்த்தி சுரேஷ், விருந்து உண்டு கொண்டாடப்பட்ட ஓணம் பண்டிகை புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.