'பிக்பாஸ்' வீட்டை விட்டு, இந்த வாரம் வெளியேறுவது இவரா?
bigg boss 6 elimination- 'பிக்பாஸ்' வீட்டுக்குள் வந்ததில் இருந்து இதுவரை, பெண்களிடம் வரம்பு மீறி நடந்துகொள்ளும் அசல் கோளார்தான், இந்த வார 'எலிமினேஷன்' ஆக இருப்பார் என்ற தகவல் வைரலாகி வருகிறது.
HIGHLIGHTS
this week elimination contestant in bigg boss 6, bigg boss 6 elimination- உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க, வெற்றிகரமாக 'பிக்பாஸ்' 6வது சீசன் ஓடிக் கொண்டிருக்கிறது. முதல் இரண்டு வாரங்கள் முடிந்துவிட்டது. இதில் இருந்து, மக்கள் மிகவும் நம்பிய, விரும்பிய ஜி.பி.முத்து அவராகவே முன்வந்து வீட்டைவிட்டு வெளியேற வேண்டும், என்றார். அவரிடம் கமல், பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து இருந்தால், இன்னும் நிறைய புகழ் கிடைக்கும், வாழ்க்கையில் எதிர்பாராத வெற்றிகளுக்கு வாய்ப்புள்ளது என்று எடுத்து சொல்லியும், 'என் குடும்பமும், குழந்தைகளுமே எனக்கு முக்கியம்' என ஜி.பி முத்து, பிடிவாதமாக இருந்ததால், அவரது சொந்த விருப்பத்தின்பேரில், அவரை, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றினார்.
இதுவரை நடந்த 'பிக்பாஸ்' 5 சீசன்களிலும், துவக்கத்தில் சில வாரங்கள் வரை போட்டியாளர்கள் அனைவருமே ஒருவருக்கு ஒருவர் நட்பாக பழகுவர். நிறைய விஷயங்களை பகிர்ந்துகொண்டு நல்ல நண்பர்களாக மாறிவிடுவர். இதில், வீட்டுக்குள் நடத்தப்படும் 'டாஸ்க்' குகளில் கூட, ஒருவருக்கு ஒருவர் மறைமுகமாக விட்டுக்கொடுத்த சம்பவங்களும், கடந்த சீசன்களில் நடந்தது உண்டு.
ஆனால், இந்த சீசனில் வந்த முதல் நாளில் இருந்தே, ஒருவருக்கு ஒருவர் பயங்கரமாக சண்டையிட்டு கொள்வதும், கடுமையான வார்த்தைகளில் திட்டிக்கொள்வதும், தொடர்ந்து நடக்கிறது. ஆனால், சண்டையிட்டு கொண்ட போட்டியாளர்கள், அடுத்த சில மணி நேரத்துக்குள் தங்களுக்குள் சகஜமாகி கொள்கின்றனர். பேசி சிரித்து, சந்தோஷமாக விளையாடுகின்றனர். அவர்களது சண்டை, தொடர்ந்து நீடிப்பது இல்லை. இது, மற்ற சீசன்களை விட வித்தியாசமாக உள்ளது.
பிக்பாஸ் வீட்டில் இருந்து, முதல் ஆளாக, 'எலிமினேட்' செய்யப்பட்டு வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டவர் சாந்தி. இந்த வாரத்திற்கான 'நாமினேஷன்' லிஸ்டில் மக்கள் விரும்பிய சில போட்டியாளர்கள் இருக்கிறார்கள், இதில் இருந்து யார் வெளியேறுவார் என்பது தெரியவில்லை, ஆனால் ஓட்டிங் விவரம் ஒன்று, சமூக வலைதளங்களில் வேகமாக வலம் வருகிறது.
இந்த வாரம் எலிமினேஷனுக்காக ரக்ஷிதா, ஜனனி, அசல் கோளார், மகாலட்சுமி, ஆயிஷா, அசீம், ஏடிகே என 7 பேர் 'நாமினேட்' செய்யப்பட்டுள்ளனர். இதில் இப்போது வரை குறைவான வாக்குகள் பெற்று கடைசியில் இருப்பது அசல் கோளார்தான். இவர் மீது கடந்த சில நாட்களாக, 'பிக்பாஸ்' பார்த்துவரும் மக்களுக்கு கோபம் தான் ஏற்பட்டுள்ளது, பெண்களிடம் தவறாக நடந்துகொள்கிறார் என்ற குற்றச்சாட்டு எழும்ப, அவருக்கு வாக்குகளும் குறைவாகவே வந்துள்ளது.
பெண்களுக்கு மிக அருகில் நெருக்கமாக அமர்ந்து கொள்வது, படுத்துக்கொள்வது, கையை பிடித்து கடிப்பது, தோள் மீது கை போடுவது என, அவரது சேட்டைகள் தொடர்ந்து எல்லை மீறியே வருகிறது. ஆனால், சனி, ஞாயிறு தினங்களில் வரும் உலகநாயகன் கமல், இதுபற்றி அசல்கோளாரிடம் எதுவுமே கேட்பதில்லை, என்ற ஆதங்கம் பார்வையாளர்களிடம் உள்ளது. அதேவேளையில், அசல் கோளாரின் நடவடிக்கைகளை போட்டியின் துவக்கத்தில் இருந்தே, தனலட்சுமி கண்டிக்கிறார். அதட்டுகிறார். சண்டையிடுகிறார். ஆனால் குயின்ஸி, நிவாஷினி, ரக்ஷிதா, மைனா போன்றவர்கள் அவரை கண்டிப்பதே இல்லை.
இந்நிலையில், இந்த வாரம் அசல்கோளார் இருப்பாரா, வெளியேறுவாரா என்பது, நாளை( ஞாயிறு) இரவு, 10 மணிக்கு தெரிந்துவிடும்.