/* */

இறந்ததாகப் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நடிகை லட்சுமி

Actress Lakshmi Death-பழம்பெரும் கதாநாயகியான நடிகை லட்சுமி இறந்துவிட்டதாகப் பரவிய செய்தி, பொய்யான வதந்தி என்று தெரிய வந்துள்ளது.

HIGHLIGHTS

இறந்ததாகப் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நடிகை லட்சுமி
X

Actress Lakshmi Death-பிரபலங்கள் குறித்த சில பொய்ச்செய்திகள் வேகமாகப் பரவி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திவிடுவதுண்டு. அதிலும், குறிப்பாக ஒருவர் உயிருடன் இருக்கும்போதே இறந்துவிட்டதாகப் பரப்பிவிடும் பொய் வதந்திகளால் சம்பந்தப்பட்டவரை மிகுந்த மனவருத்தத்துக்கும் மன உளைச்சலுக்கும் ஆட்படுத்தும். ஆனால், இதையெல்லாம் கொஞ்சமும் சிந்திக்காமல் பொய் வதந்திகளைப் பரப்புவோர் காலகாலமாக இப்படிச் செய்து வருவது என்பது வேதனைக்குரியது. கண்டனத்துக்குரியது.


தற்போது, தமிழ்த் திரையுலகின் பழம்பெரும் நாயகியான நடிகை லட்சுமி இறந்துவிட்டதாகப் பரவிய செய்தி, அவரையும் அவரது ரசிகர்களையும் மிகவும் வேதனைக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியது. புதுச்சேரியில் யானை லட்சுமி உயிரிழந்த செய்தி பலரது இதயத்தையும் உலுக்கிய நிலையில், ஒரு சில விஷமிகள் யானை லட்சுஙமிக்குப் பதிலாக நடிகை லட்சுமி உயிரிழந்து விட்டார் என பொய்ச் செய்தியைப் பரபரவெனக் கிளப்பி விட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது. ஜாக்கி சான் இறந்து விட்டார், சாலமன் பாப்பையா காலமானார் என தேவையற்ற வதந்திகளை அடிக்கடி சமூக வலைத்தளங்களில் சில நெட்டிசன்கள் பரப்பி வருவதை வாடிக்கையாகக் கொண்டு உள்ளனர். அதுபோலவே, நடிகை லட்சுமி இறந்ததாக வதந்தியைக் கிளப்பிவிட்டுள்ளனர்.

பழம்பெரும் நடிகை லட்சுமி உயிரிழந்துவிட்டதாகத் தீயாகப் பரவிய வதந்தியைக்கொண்டு அவரது அபிமானி ஒருவர் உடனடியாக நடிகையை லட்சுமியை போனில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அதற்கு நடிகை லட்சுமி, தான் நலமாக உள்ளேன் என்றும் ஏன் இப்படி கிளப்பி விடுறாங்க என்றும் மிகவும் மனவருத்தத்துடன் விளக்கம் கொடுத்துள்ளார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பத்மினி நடிப்பில் 1961ம் ஆண்டு வெளியான, 'ஸ்ரீவள்ளி' திரைப்படத்தில் குழந்தை வள்ளியாக நடித்து தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி. அதனைத் தொடர்ந்து 'மாட்டுக்கார வேலன்', 'பெண் தெய்வம்', 'குமரிக்கோட்டம்', 'சம்சாரம் அது மின்சாரம்', 'ஜீன்ஸ்', 'உன்னைப்போல் ஒருவன்' உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகை லட்சுமி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய நடிகையாக வலம் வரும் பழம்பெரும் நடிகை லட்சுமி திடீரென இறந்துவிட்டதாக செய்திகள் சமூக வலைத் தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வந்தன.

இதனைத் தொடர்ந்து பல்வேறு ஊடகவியலாளர்களும் பத்திரிகையாளர்களும் ரசிகர்களும் நடிகை லட்சுமியின் அபிமானிகளும் நடிகை லட்சுமிக்கே போன் போட்டு அது முற்றிலும் வதந்தி என்பதை அறிந்து கொண்டனர். இந்த வதந்தி குறித்து நடிகை லட்சுகியிடமே போன் செய்து விசாரித்த நிலையில், ''நான் ரொம்ப நல்லாவே இருக்கேன்ப்பா... பிறந்து விட்டால் என்றாவது ஒரு நாள் இறக்கத்தான் வேண்டும். மரணத்திற்காக எல்லாம் நான் எப்போதும் பயந்தது கிடையாது. யாரு இப்படி வேலை வெட்டி இல்லாமல் இந்த வதந்தியைக் கிளப்பிவிட்டது என தெரியவில்லை.

எனக்கு ஏதோ ஆகிடுச்சுன்னு பதறிப் போய் போன் போட்டு காலையில் இருந்தே ஏகப்பட்ட மீடியா நண்பர்களும் திரையுலக நண்பர்களும் விசாரித்து வருகின்றனர். லட்சுமி மீது அக்கறை கொண்டவர்களும் இங்கே நிறைய பேர் இருக்காங்க என்பதை நினைக்கும் போது ரொம்பவே மனசுக்கு சந்தோஷமாக இருக்கு'' என்று கூறியிருக்கிறார்.

நடிகை லட்சுமிக்கு வரும் டிசம்பர் 13ம் தேதி பிறந்தநாள். அன்றுடன் அவருக்கு 70 வயது நிறைவடைகிறது. அதற்குள் நடிகை லட்சுமி இறந்துவிட்டதாக தேவையற்ற வதந்திகளை சமூக வலைத் தளங்களில் சில விஷமிகள் பரப்பி உள்ளனர். ''நான் நல்லா ஆரோக்கியமாகத்தான் இருக்கேன். இப்போ காய்கறி கடையில் காய்களை வாங்கிக் கொண்டு இருக்கேன்'' என்று கேட்டவர்களுக்கெல்லால் புன்னகையோடு பதிலளித்து பொய்வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நடிகை லட்சுமி.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 20 March 2024 4:35 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்