சபரி மலை கோவிலில் பெண்கள் அனுமதி பற்றி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சர்ச்சை கருத்து
aishwarya rajesh interview, aishwarya rajesh bold reply about godசபரி மலை கோவிலில் பெண்கள் அனுமதி பற்றி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சர்ச்சை கருத்தை பேட்டியாக அளித்து உள்ளார்.
HIGHLIGHTS
aishwarya rajesh interview, aishwarya rajesh bold reply about godசபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் அனுமதிக்கப்படாதது குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ள கருத்துக்கள் மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
சபரிமலை கோவில்
aishwarya rajesh interview, aishwarya rajesh bold reply about godகேரள மாநிலத்தின் சபரிமலையில் உள்ள உலக புகழ் பெற்ற ஐயப்பன் கோவிலில் 10 வயதிற்கு மேல் ஐம்பது வயதிற்கு உட்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. பெண்களின் உடல் ரீதியான உபாதை (மாதவிடாய்) பிரச்சினைகாரணமாக அந்த கோவிலில் கடைபிடிக்கப்பட்டு வரும் ஐதீக மரபின் படி இது நடைமுறையில் உள்ளது.
பெண்களுக்கு அனுமதி இல்லை
aishwarya rajesh interview, aishwarya rajesh bold reply about godகடந்த சில ஆண்டுகளுக்கு முன் சில அமைப்பை சேர்ந்த பெண்கள் இந்த நடைமுறைக்கு எதிராக சபரிமலை கோவிலுக்கு செல்ல முயன்றபோது போலீசாரால் அப்புறப்படுத்தப்பட்டனர். அந்த கால கட்டத்தில் இது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சில மகளிர் அமைப்புகள் தெரிவிக்கும் கருத்துக்கள் அவ்வப்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
aishwarya rajesh interview, aishwarya rajesh bold reply about god
இந்த சர்ச்சையில் தற்போது சிக்கி இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் 2011ம் ஆண்டு 'அவர்களும் இவர்களும்' என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதற்கு முன்னதாக இவர் தனியார் டி.வி.யில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்று வெற்றியாளராக வந்தார். அதன்பிறகு தான் படங்களில் நடிக்க தொடங்கினார்.
aishwarya rajesh interview, aishwarya rajesh bold reply about god'அட்டகத்தி' என்ற படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்திருந்த இவர் ஆச்சரியங்கள், புத்தகம், ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்தார். இவருடைய தந்தை தெலுங்கு திரைப்படங்களில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து கதாநாயகி ஆனவர்களில் ஐஸ்வர்யா ராஜேஷும் ஒருவர்.
டிரைவர் ஜமுனா
aishwarya rajesh interview, aishwarya rajesh bold reply about godதற்போது இவர் மலையாள ரீமேக் படமான டிரைவர் ஜமுனா என்ற படத்தில் நடித்து உள்ளார். இது முழுக்க முழுக்க பெண் டாக்சி டிரைவர் சம்பந்தப்பட்ட கதைக்களத்தை அடிப்படையாக கொண்டது. மேலும் ரன் பேபி ரன் என்ற படத்திலும் நடித்து உள்ளார். இந்த இரண்டு திரைப்படங்களும் பிப்ரிவர் 3ம் தேதி திரைக்கு வர இருக்கின்றன.
இந்தநிலையில், தி கிரேட் இந்தியன் கிச்சன் படக்குழுவின் செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது:-
சமையலில் உதவி
aishwarya rajesh interview, aishwarya rajesh bold reply about godடிரைவர் ஜமுனா படம் ஓடிடியில் வெற்றி பெற்று உள்ளது சந்தோஷத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சமூகத்தில் இன்னும் ஆணாதிக்கம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. சென்னை போன்ற நகரங்களை விட கிராமங்களில் இது அதிகமாக உள்ளது. எனக்கு கணவராக வரக்கூடியவர் சமையல் அறையில் எனக்கு உதவி செய்யவேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன். பெரும்பாலான பெண்களின் மனநிலையும் இது தான்.
சபரிமலை கோவிலில் பெண்கள் அனுமதிக்கப்படாதது குறித்து கேட்கிறார்கள். நான் குறிப்பிட்ட ஒரு கோவில் என்றல்லாமல் எந்த கோவிலுக்கும் பொதுவாக சொல்கிறேன்.
கடவுள் சட்டம் வைக்கவில்லை
aishwarya rajesh interview, aishwarya rajesh bold reply about godபொண்ணுங்களுக்குனா தீட்டா..''எந்த கடவுள் சொல்லுச்சு. கடவுள் எல்லோருக்கும் ஒன்று தான். ஆண், பெண் வித்தியாசமெல்லாம் கடவுளுக்கு கிடையாது. எந்தக்கடவுளும் என் கோவிலுக்கு இவர்கள் வரலாம், அவர்கள் வரக்கூடாது என்று சொல்லவில்லை. அப்படி எந்த கடவுளாவது சொல்லியிருக்கிறார்களா? இருந்தால் சொல்லுங்கள். எந்த கடவுளும் இது பண்ணக்கூடாது. இது சாப்பிடக்கூடாது என சட்டம் வைக்கவில்லை. எல்லேமே மனிதர்கள் உருவாக்கியது தான்.
ஆணாதிக்கம்
aishwarya rajesh interview, aishwarya rajesh bold reply about godநான் இது போன்ற கட்டுப்பாடுகளை எப்போதும் நம்புவதில்லை. இப்பொழுது கூட ஆணாதிக்கம் இருக்கிறது.ஆணாதிக்கம் என்பது கிராமத்து பக்கம் நிறைய இருக்கின்றது என்பது எனது கருத்து.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படாதது குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.