/* */

பாகிஸ்தான் ரயில் விபத்து: 50 பேர் பலி

பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் இரண்டு பயணிகள் ரயில்கள் மோதியதில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர். 70 பேர் காயமடைந்தனர்

HIGHLIGHTS

பாகிஸ்தான் ரயில் விபத்து: 50 பேர் பலி
X

பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் இரண்டு பயணிகள் ரயில்கள் மோதியதில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் இரண்டு பயணிகள் ரயில்கள் மோதியதில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 70 பேர் காயமடைந்தனர், மீட்பு மற்றும் நிவாரண பணிக்காக இராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

கராச்சியில் இருந்து சர்கோதாவுக்கு செல்லும் மில்லட் எக்ஸ்பிரஸ் ரயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டு அடுத்த தண்டவாளத்தில் விழுந்தது. அப்போது ராவல்பிண்டியில் இருந்து கராச்சி செல்லும் சர் சையத் எக்ஸ்பிரஸ் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பாகிஸ்தான் ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். விபத்தில் குறைந்தது 50 பேர் பலியானார்கள், 70 பேர் காயமடைந்துள்ளனர்.

ரயில் விபத்து குறித்து அதிர்ச்சியடைந்த பிரதமர் இம்ரான் கான், காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவியை அளிக்கவும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

விபத்தில் 13 முதல் 14 போகிகள் தடம் புரண்டன, ஆறு முதல் எட்டு வரை முற்றிலும் சேதமடைந்தது. இரண்டு ரயில்களில் 1,000க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சேதமடைந்த மற்றும் கவிழ்ந்த சில பெட்டிகளின் இடிபாடுகளில் சுமார் 20 பயணிகள் இன்னும் சிக்கியுள்ளனர். சேதமடைந்த பெட்டிகளை அகற்ற இயந்திரங்கள் தேவைப்படுவதால் மீட்பு நடவடிக்கை தாமதமாகும் என தெரிகிறது மீட்பு மற்றும் நிவாரண பணிகள் விரைவாக நடந்தாலும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

பாகிஸ்தான் இராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளும் மீட்பு பணிகளுக்கு விரைந்தனர்.

கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கு தலா 15 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. . காயமடைந்தவர்களுக்கு காயத்தின் தன்மையைப் பொறுத்து குறைந்தபட்சம் ரூ.100,000 மற்றும் அதிகபட்சமாக ரூ .300,000 வழங்கப்படும்.

பாகிஸ்தானில் ரயில் விபத்துக்கள் பொதுவானவை மற்றும் ஒவ்வொரு ஆண்டும் டஜன் கணக்கான மக்கள் உயிர் இழக்கின்றனர். தவறான மேலாண்மை மற்றும் குறைவான முதலீடு காரணமாக ரயில்வே பல ஆண்டுகளாக சரிவை சந்தித்து வருகிறது. ரயில்வே நெட்வொர்க் பல இடங்களில் காலாவதியாக இருப்பதால் இதுபோன்ற விபத்துக்கள் பாகிஸ்தான் முழுவதும் அவ்வப்போது நிகழ்கின்றன.

Updated On: 7 Jun 2021 12:15 PM GMT

Related News