Begin typing your search above and press return to search.
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து உடுமலையில் மகிளா காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, உடுமலையில் மகிளா காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
பெட்ரோல், டீசல்,சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வை கண்டித்து மாநிலம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. அவ்வகையில், பெட்ரோல்,டீசல் , சமையல் எரிவாவு விலை ஏற்றத்தை கண்டித்து, திருப்பூர் தெற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில், உடுமலை அருகே பெரியகோட்டையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு, மகிளா காங்கிரஸ் தலைவர் சுஜாதா அண்ணாமலை தலைமை வகித்தார். தேன்மொழி முன்னிலை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் பொன்பலராமன், மாநில துணைத்தலைவர் வெற்றிவேல்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், மத்திய அரசுக்கு எதிராக, கோஷமிட்டனர்.