/* */

உடுமலை: அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீடு செய்ய பயனாளிகள் கோரிக்கை

உடுமலையில், அடுக்குமாடி குடியிருப்புகளை பயனாளிகளுக்கு ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

HIGHLIGHTS

உடுமலை: அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீடு செய்ய பயனாளிகள் கோரிக்கை
X

உடுமலையில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு 

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள, புக்குளத்தில், நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் சார்பில், 26.26 கோடி ரூபாய் செலவில், அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. தரை தளத்துடன் மூன்று மாடிகளுடன், 320 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் படுக்கை அறை, சமையல் அறை, கழிவறை மற்றும் பால்கனியுடன், 400 சதுர அடி பரப்பளவில் வீடுகள் உள்ளன.

தங்கம்மாள் ஓடை உள்ளிட்ட நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள் அகற்றப்பட்டு, அங்குள்ளவர்களுக்கு, அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. கடந்த, 2021 பிப்ரவரி துவக்கத்தில், திறப்பு விழா நடத்தப்பட்டது. இருப்பினும், இதுவரை பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கப்படவில்லை. 'விரைவில் தகுதியான பயனாளிகளுக்கு வீடுகளை ஒதுக்க வேண்டும்' என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Updated On: 15 Jan 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!