/* */

திருப்பூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி, அம்ரூத் திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

திருப்பூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி, அம்ரூத் திட்டப்பணிகள் குறித்து இன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருப்பூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி, அம்ரூத் திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்
X

திருப்பூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கமிஷனர் கிராந்திகுமார்பாடி தலைமையில் இன்று நடந்தது.

திருப்பூர் மாநகராட்சியின் 2050 ஆண்டின் மக்கள் தொகை, 19.50 லட்சம் இருக்கும் என கணக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த மக்கள் தொகைக்கு ஏற்ப, மாநகராட்சியில் குடிநீர், பாதாள சாக்கடை உள்ளிட்ட பல்வேறு பணிகள், அம்ரூத் திட்டத்தில் நடக்கிறது. இதேபோல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாநகரை நவீனப்படுத்தும் வகையிலான பணிகள் நடக்கிறது.

இந்த நிலையில், ஸ்மார்ட் சிட்டி, அம்ரூத் திட்டத்தில் நடைபெற்று வரும் பணிகள் விவரம், தற்போதைய நிலவரம் குறித்து அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம், திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கமிஷனர் கிராந்திகுமார்பாடி தலைமை வகித்தார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளையும், அம்ரூத் திட்ட பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என, அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார். கூட்டத்தில் மாநகர பொறியாளர் ஜி.ரவி, செயற்பொறியாளர் முகமதுசலியுல்லா, நேர்முக உதவியாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 18 Jun 2021 3:35 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!