/* */

திருப்பூரில் விதிமீறி செயல்பட்ட நிறுவனங்கள், கடைகளுக்கு 'சீல்'

திருப்பூர் வீரபாண்டி பகுதியில், விதிமீறி செயல்பட்ட நிறுவனங்கள், கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

HIGHLIGHTS

திருப்பூரில் விதிமீறி செயல்பட்ட நிறுவனங்கள், கடைகளுக்கு சீல்
X

திருப்பூர் மாநகராட்சி வீரபாண்டி பகுதிகளில், தொழில் நிறுவனங்கள் விதிமுறை மீறி இயங்குவதாக வருவாய் துறையினருக்கு புகார் சென்றது. அதன்பேரில் திருப்பூர் ஆர்டிஓ ஜெகநாதன் மற்றும் தெற்கு தாசில்தார் சுந்தரம் ஆகியோர், வீரபாண்டி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, வீரபாண்டி - இடுவம்பாளையம் ரோட்டில் பனியன் தொழிற்சாலை ஒன்று, விதிமுறைமீறி அனுமதியின்றி இயங்குவது தெரியவந்தது. அந்நிறுவனத்தை மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி முன்னிலையில், அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். அதேபோல், கரும்வம்பாளையத்தில் இயங்கிய நகைப்பட்டறை, பாலாஜி நகர் இரண்டாவது நகரில் இயங்கிய பனியன் கம்பெனி ஆகியனவும் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

மேலும், வேறுசில நிறுவனங்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் திருப்பூர் தாராபுரம் ரோட்டில் பால் விற்பதாகக்கூறி, காய்கறிகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கடையை சுகாதாரத்துறையினர் பூட்டி சீல் வைத்தனர்.

Updated On: 4 Jun 2021 3:48 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?