/* */

திருப்பூரில் இரவிலும் தொடர்ந்த வருவாய்த் துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

திருப்பூரில் நேற்று இரவு வருவாய்த் துறை ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

திருப்பூரில் இரவிலும் தொடர்ந்த வருவாய்த் துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
X

திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் இரவிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் வருவாய்த்துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் , சான்றிதழ் வழியங்கும் பணிக்கான புதிய துணை தாசில்தார் பணியிடங்களை நிரப்ப வேண்டும் , 2024 நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள முழுமையாக நிதி ஒதுக்கீட்டினை செய்ய வேண்டும் , அதீத பணிநெருக்கடி அளிக்கப்படுவதை தவிர்த்து சிட்டாப்பணிகளை செம்மையாக மேற்கொள்ள உரிய கால அவகாசம் மற்றும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் இதுவரை தமிழக அரசு தங்கள் கோரிக்கையை பரிசீலித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என குற்றம் சாட்டி மூன்றாம் கட்ட போராட்டமாக நேற்று இரவு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை இரவு பகலாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

Updated On: 5 March 2024 1:14 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!