/* */

தேங்காய் கரித்தொட்டி ஆலைக்கு எதிா்ப்பு; பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மக்கள் போராட்டம்

Tirupur News-தேங்காய் கரித்தொட்டி ஆலைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, பொதுமக்கள் பல்லடத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்தினா்.

HIGHLIGHTS

தேங்காய் கரித்தொட்டி ஆலைக்கு எதிா்ப்பு; பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மக்கள் போராட்டம்
X

Tirupur News- பல்லடத்தில் தேங்காய் கரித்தொட்டி ஆலைக்கு எதிா்ப்பு தெரிவித்த பொதுமக்கள்.

Tirupur News,Tirupur News Today-தேங்காய் கரித்தொட்டி ஆலைக்கு எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் பல்லடத்தில் வட்டாட்சியா் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்தி செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் ஒன்றியம், வாவிபாளையம் ஊராட்சி, குள்ளம்பாளையத்தில் தேங்காய் தொட்டி சுடும் ஆலை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இயங்கி வந்தது. எந்தவித அனுமதியும் இன்றி மாசுக் கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் இயங்கி வந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசடைவதாகவும், நிலத்தடி நீா் பாதிப்பு அடைவதாகவும், கால்நடைகளுக்கு நோய்த் தொற்று ஏற்படுவதாகவும் கூறி அந்தப் பகுதி மக்கள் தொடா்ச்சியாகப் போராட்டம் நடத்திய நிலையில் தேங்காய் கரித் தொட்டி ஆலையை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இடித்து அகற்றினா்.

இந்த நிலையில், மீண்டும் அதே இடத்தில் தேங்காய் கரித் தொட்டி ஆலை அமைப்பதற்கான பணிகள் வாவிபாளையம் ஊராட்சி நிா்வாகத்தின் கட்டட வரைபட அனுமதி இல்லாமலேயே நடைபெற்று வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்து அந்த ஆலைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வாவிபாளையம் ஊராட்சித் தலைவா் கலாமணி கருப்புசாமி, துணைத் தலைவா் கவிப்பிரியா லோகநாதன் ஆகியோா் தலைமையில் ஊராட்சி முன்னாள் தலைவா் பாா்த்தசாரதி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவா் வழக்குரைஞா் ஈசன் முருகசாமி, விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தகவல் அறிந்து அலுவலகம் வந்த வட்டாட்சியா் ஜெய் சிங் சிவகுமாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா். அதைத் தொடா்ந்து வாவிபாளையத்துக்குச் சென்று கரித்தொட்டி ஆலையை ஆய்வு செய்த வட்டாட்சியா் கட்டடப் பணி மேற்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தினாா்.

இது குறித்து வாவிபாளையம் ஊராட்சி முன்னாள் தலைவா் பாா்த்தசாரதி கூறியதாவது: இந்தப் பிரச்னைக்கு உரிய தீா்வு கிடைக்கும் வரை அறவழியில் தொடா்ந்து போராட்டங்கள் நடத்தப்படும் என்றனா்.

Updated On: 3 Jan 2024 8:43 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!