/* */

திருப்பூர் மாவட்டத்தில், ஆண்களை முந்திய பெண் வாக்காளர்கள்

New Voter List 2022 -திருப்பூர் மாவட்டத்தில், 23 லட்சத்து 19 ஆயிரத்து 219 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

HIGHLIGHTS

திருப்பூர் மாவட்டத்தில், ஆண்களை முந்திய பெண் வாக்காளர்கள்
X

திருப்பூர் மாவட்டத்தில், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு.

New Voter List 2022 -திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் மற்றும் மறுசீரமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகள் பட்டியலை கலெக்டர் வினீத் வெளியிட்டார்.

அதன்படி தொகுதி வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை வருமாறு

தாராபுரம் (தனி) சட்டசபை தொகுதி

ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 222 பேர், பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 313 பேர், மூன்றாம் பாலினத்தவர் 10 பேர் என மொத்தம் 2 லட்சத்து 57 ஆயிரத்து 545 பேர் உள்ளனர்.

காங்கயம் சட்டசபை தொகுதி

ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 553 பேர், பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 551 பேர், மூன்றாம் பாலினத்தவர் 21 பேர் என மொத்தம் 2 லட்சத்து 54 ஆயிரத்து 125 பேர் உள்ளனர்.

அவிநாசி (தனி) சட்டசபை தொகுதி

ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 300 பேர், பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 394 பேர், மூன்றாம் பாலினத்தவர் 4 பேர் என மொத்தம் 2 லட்சத்து 76 ஆயிரத்து 698 வாக்காளர்கள் உள்ளனர்.

திருப்பூர் வடக்கு சட்டசபை தொகுதி

ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 618 பேர், பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 540 பேர், மூன்றாம் பாலினத்தவர் 140 பேர் என மொத்தம் 3 லட்சத்து 80 ஆயிரத்து 298 வாக்காளர்கள் உள்ளனர்.

திருப்பூர் தெற்கு சட்டசபை தொகுதி

ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 874 பேர், பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 874 பேர், மூன்றாம் பாலினத்தவர் 35 பேர் என மொத்தம் 2 லட்சத்து 67 ஆயிரத்து 783 வாக்காளர்கள் உள்ளனர்.

பல்லடம் சட்டசபை தொகுதி

ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 379 பேர், பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 38 பேர், மூன்றாம் பாலினத்த வாக்காளர்கள் 69 பேர் என மொத்தம் 3 லட்சத்து 84 ஆயிரத்து 486 வாக்காளர்கள் உள்ளனர்.

உடுமலை சட்டசபை தொகுதி

ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 632 பேர், பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 633 பேர், மூன்றாம் பாலினத்தவர் 25 பேர் என மொத்தம் 2 லட்சத்து 61 ஆயிரத்து 290 வாக்காளர்கள் உள்ளனர்.

மடத்துக்குளம் சட்டசபை தொகுதி

ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 854 பேர், பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 120 பேர், மூன்றாம் பாலினத்தவர் 20 பேர் என மொத்தம் 2 லட்சத்து 36 ஆயிரத்து 994 வாக்காளர்கள் உள்ளனர்.

இதன்படி திருப்பூர் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 11 லட்சத்து 42 ஆயிரத்து 432 பேரும், பெண் வாக்காளர்கள் 11 லட்சத்து 76 ஆயிரத்து 463 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 324 பேரும் என மொத்தம் 23 லட்சத்து 19 ஆயிரத்து 219 வாக்காளர்கள் உள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களைவிட, 34 ஆயிரத்து 31 பேர் என்ற எண்ணிக்கையில், பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், தாசில்தார் (தேர்தல்) தங்கவேல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகம், தாசில்தார் அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி மையங்கள் ஆகியவற்றில் பொதுமக்களின் பார்வைக்காக, வரைவு வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டிருக்கும். பொதுமக்கள் வரைவு வாக்காளர் பட்டியலை சரிபார்த்து, தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பதை உறுதி செய்து கொள்ளலாம்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 10 Nov 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...