Begin typing your search above and press return to search.
அவினாசியில் மழலைகளுக்கு மங்கல இசையுடன் மகிழ்ச்சி நிறைந்த வரவேற்பு
அவினாசியில் நீண்ட இடைவெளிக்குபின், பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ, மாணவியருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
HIGHLIGHTS
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால், கடந்த, 19 மாத இடைவெளிக்கு பின், 1ம் வகுப்பு முதல், 8 ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கான வகுப்பு இன்று துவங்கியது.
திருப்பூர் மாவட்டம், அவினாசியில் உள்ள புனித தாமஸ் பள்ளிக்கு வந்த மாணவியரை, 9 முதல், 12ம் வகுப்பு படிக்கும் மாணவியர், பலுான்களை ஏந்தியவாறு, உற்சாகமாக வரவேற்றனர். பின்னணியில், மங்கல இசை வாசிக்கப்பட்டது.
துவக்கப்பள்ளியில் படிக்கும் குழந்தைகள், ஆர்வத்துடன் வகுப்பறைக்கு சென்றனர். அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.