/* */

திருவாரூரில் காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு தின நிகழ்ச்சிகள்

திருவாரூரில் காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு நாள் நிகழ்ச்சிகள் ரோட்டரி சங்கம் சார்பில் நடந்தது.

HIGHLIGHTS

திருவாரூரில் காந்தி ஜெயந்தி மற்றும்  காமராஜர் நினைவு தின நிகழ்ச்சிகள்
X
திருவாரூரில் காமராஜர் சிலைக்கு ரோட்டரி சங்கம் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.

திருவாரூர் ரோட்டரி கிளப் ஆப் கிங்ஸ் சார்பில் படிக்காத மாமேதை, தமிழக முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் நினைவு நாள் மற்றும் தேசத் தந்தை மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் நடந்தது. திருவாரூர், கீழவீதி காமராஜர் பவனில் உள்ள காமராசஜர் உருவ சிலைக்கு மற்றும் மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்திற்கும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இந்நிகழ்வில் திருவாரூர் ரோட்டரி கிளப் ஆப் கிங்ஸ் சங்கம் ராஜ் (எ) கருணாநிதி, தலைமை தாங்கினார். பொருளாளர்.மாரிமுத்து, உத்திராபதி, மண்டலம் 11 -ன் உதவி ஆளுநர் ராமதுரை, கிங்ஸ் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பெருமளவில் கலந்து கொண்டார்கள்.

Updated On: 3 Oct 2021 4:02 AM GMT

Related News