/* */

மாணவர்களுக்கான நீட் தேர்வு கட்டணத்தை செலுத்திய மாவட்ட ஆட்சியர்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தன்விருப்ப நிதியிலிந்து 63 மாணவர்களுக்கு நீட் தேர்விற்கான விண்ணப்பக் கட்டணத்தினை வழங்கினார்.

HIGHLIGHTS

மாணவர்களுக்கான நீட் தேர்வு கட்டணத்தை செலுத்திய மாவட்ட ஆட்சியர்
X

திருவாரூர் ஆட்சியர் காயத்ரிகிருஷ்ணன் தன் விருப்ப நிதியிலிந்து அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நீட் தேர்விற்கான விண்ணப்பக்கட்டணத்தினை வழங்கினார்.

திருவாரூர் ஆட்சியர் காயத்ரிகிருஷ்ணன் தன் விருப்ப நிதியிலிந்து அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கு நீட் தேர்விற்கான விண்ணப்பக்கட்டணத்தினை வழங்கினார். தொடர்ந்து மாணவர்களிடம் ஆட்சியர் பேசியபோது, திருவாரூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலிருந்து நீட் தேர்வு எழுதுவதற்காக தமிழக அரசின் சார்பில் இணைய வழிப்பயிற்சி நடைபெற்று வருகிறது.

இப்பயிற்சி வகுப்பில் 505 மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். அரசு பள்ளிகளில் பயிலும் சிறந்த மாணவர்கள் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்கும் பொருட்டு 63 மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டண உதவித்தொகையாக பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோர் மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.1400/- எனவும் பட்டியல் வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.800/- வீதமும், மொத்தம் ரூ.75,000/- மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.

பெற்றோர்களின் எண்ணங்களை நிறைவேற்றுகின்ற பிள்ளைகளாக நீங்கள் திகழ வேண்டும். அந்தவகையில், இந்த நீட்தேர்வினை எந்தவித தயக்கமின்றி தேர்வில் வெற்றி பெறுவதை ஒன்றே குறிக்கோளாக கொண்டு தேர்வு எழுதி வெற்றி பெற்றிட வேண்டுமென மாணவர்களுடையே தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுலவர் சிதம்பரம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன், வருவாய் கோட்டாட்சியர் பாலசந்திரன், மாவட்ட கல்வி அலுவலர் மணிவண்ணன், நீட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நடனம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Updated On: 28 July 2021 1:45 PM GMT

Related News