/* */

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்று முதன் முறையாக இன்று மாலை திருவாரூர் வருகிறார்.

ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்ற பின் முதன் முறையாக திருவாரூர் வருகை

HIGHLIGHTS

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்று முதன் முறையாக இன்று மாலை திருவாரூர் வருகிறார்.
X

தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்று முதன் முறையாக திருவாரூர் இன்று மாலை திருவாரூர் வருகிறார்.

திருவாரூரில் ரூ.10 கோடியே 50 லட்சம் மதிப்பில் மகப்பேறு மற்றும் குழந்தை நல சிகிச்சை மையத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். 1000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். டிரோன் கேமரா (DRONE CAMERA) பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்ற பிறகு முதல் முறையாக இன்று மாலை திருவாரூர் வருகிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் புறப்பட்டு திருச்சிக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து காரில் தஞ்சாவூர் மற்றும் மன்னார்குடி வழியாக திருவாரூர் வருகிறார். இன்று இரவு காட்டூரில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் தாயாருமன (அஞ்சுகம் அம்மையார்), தனது பாட்டி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.

பின்னர் திருவாரூர் சந்நிதி தெருவில் உள்ள அவருடைய இல்லத்திற்கு சென்று ஒய்வெடுகிறார்.நாளை (புதன்கிழமை) காலை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.10 கோடியே 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மகப்பேறு மற்றும் குழந்தை நல சிகிச்சை மைய கட்டித்தை திறந்து வைக்கிறார்.

அதனை தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளைக்கு மு.க.ஸ்டாலின் புறப்பட்டு செல்கிறார்.அங்கு தனது தந்தை இல்லமான முத்துவேலர் நூலகம், அஞ்சுகம் படிப்பகத்திற்கு சென்று கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்து விட்டு கட்சி நிர்வாகிகள் சந்தித்து பேசுகிறார். பின்னர் அங்கிருந்து புறபட்டு திருவெண்காடு செல்கிறார். இதனையடுத்து சாலை மார்க்கமாக காரில் சென்னைக்கு புறப்படுகிறார்.

இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் டிரோன் கேமரா(DRONE CAMERA) இன்று மற்றும் நாளை பறந்திடவும், செயல்படுத்திடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகையால், இந்த விதிகளை மீறி டிரோன் கேமரா (DRONE CAMERA) பயன்படுத்த வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ப. காயத்ரி கிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் வருகையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்று முதன் முறையாக திருவாரூர் வருவதால் கட்சியினர், பொதுமக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Updated On: 7 July 2021 3:47 AM GMT

Related News