Begin typing your search above and press return to search.
அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் பெண் பலி
தேவதானப்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் டூ வீலரில் சென்ற பெண் பலியானார்.
HIGHLIGHTS
தேவதானப்பட்டி கெங்குவார்பட்டி கல்லுப்பட்டி பெருமாள் கோயி்ல் தெருவை சேர்ந்தவர் சின்னக்காமன். இவர் தனது மனைவி சோலையம்மாளுடன் ஆண்டிபட்டி வந்து விட்டு, டூ வீலரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். காட்ரோடு பிரிவு அருகே இவர்கள் சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் டூ வீலர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சோலையம்மாள் சம்பவ இடத்திலேயே இறந்தார். தேவதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.