/* */

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்..! பிரதமர் மோடி எச்சரிக்கை....!

காங்கிரஸ் கட்சியிடம் ஆபத்தான உள்நோக்கங்கள் உள்ளன என பிரதமர் மோடி தெரிவித்தார்.

HIGHLIGHTS

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்..! பிரதமர் மோடி எச்சரிக்கை....!
X

சத்தீஸ்கரில் உள்ள சர்குஜா மாவட்டத்தின் தலைமையகமான அம்பிகாபூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: "காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள் ஒவ்வொன்றாக வெளிவருகின்றன. இப்போது அது பரம்பரை சொத்துக்களுக்கு வரி விதிக்கப்படும் என்று சொல்கிறது. முன்பு ராகுலின் தந்தைக்கும், தற்போது ராகுலுக்கும் ஆலோசகராக இருக்கும் சாம் பிட்ரோடா, நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் கடினமாக உழைத்து சம்பாதிப்பவர்கள் மீது அதிக வரி திணிக்கப்பட வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

இதை அவர் (சாம் பிட்ரோடா) பகிரங்கமாக கூறினார். இப்போது அவர்கள் (காங்கிரஸ்) ஒரு படி மேலே சென்று பரம்பரை சொத்துக்களுக்கு வரி விதிக்கப் போகிறோம் என்கிறார்கள். அப்படியானால், பெற்றோரிடமிருந்து அவர்களின் வாரிசுகள் பெரும் சொத்துக்களுக்கு வரி விதிக்கப்படும். அப்படியானால், 'கை' (காங்கிரஸ் தேர்தல் சின்னம்) உங்கள் பிள்ளைகளிடம் இருந்து சொத்துகளை பறித்து விடும்.

நீங்கள் உயிருடன் இருக்கும் வரை, காங்கிரஸ் அதிக வரி விதிக்கும். உங்கள் ஆயுள் முடிந்த பிறகு, அது உங்கள் மீது பரம்பரை சொத்துக்கள் மீதும் வரியைச் சுமத்தும். அவர்கள் (காங்கிரஸ்) உங்கள் சொத்துகளையும் உங்கள் குழந்தைகளின் உரிமைகளையும் பறிக்க விரும்புகிறார்கள். சாமானிய இந்தியர்கள் தங்கள் சொத்துகளை தங்கள் குழந்தைகளுக்கு கொடுப்பதை காங்கிரஸ் விரும்பவில்லை. நுகர்வு கலாச்சாரத்தின் மீது நம்பிக்கை கொண்டது அல்ல நம் நாடு. பொருளீட்டுதல், ஈட்டிய பொருளின் மதிப்பை அதிகரித்தல், பாதுகாத்தல் ஆகியவற்றில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

திருமணத்தின்போது பேரக்குழந்தைகளுக்கு அணிவிக்க வேண்டும் என்று நினைத்து வயதான தாத்தா, பாட்டி ஆகியோர் தங்கள் சிறிய ஆபரணங்களை பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். நாட்டு மக்கள் கடினமாக உழைக்கிறார்கள். அவர்களின் தேவைக்கேற்ப செலவு செய்கிறார்கள். அதேநேரத்தில், சொத்து சேர்க்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

இந்தியாவின் இந்த அடிப்படை மதிப்பீடு மற்றும் கலாச்சாரத்தின் மீது காங்கிரஸ் கடுமையாகத் தாக்க திட்டமிடுகிறது. காங்கிரஸை நகர்ப்புற நக்சல்கள் மற்றும் நகர்ப்புற மாவோயிஸ்டுகள் கைப்பற்றியுள்ளனர் என்று நான் சொன்ன போது, அமெரிக்காவை சமாதானப்படுத்த ஏதாவது சொல்ல வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள். நான் குற்றச்சாட்டுகளை கூறியபோது, அவர்கள் திரும்பி வருவது போல் நடித்தனர். ஆனால், அவர்கள் உங்கள் சொத்துகளை சூறையாடி உங்கள் குழந்தைகளின் உரிமைகளை பறிக்க நினைக்கிறார்கள். இதை நீங்கள் அனுமதிப்பீர்களா?

நாட்டில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த வரை மக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. பாஜக ஆட்சி அமைந்த பிறகு மக்களின் பணம் அவர்களுக்காக செலவிடப்படுகிறது. காங்கிரஸின் கண்கள் உங்கள் இடஒதுக்கீட்டின் மீது மட்டுமல்ல, உங்கள் வருமானம், உங்கள் வீடுகள், கடைகள் மற்றும் பண்ணைகள் மீதும் உள்ளன.

நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் சொத்துக்களையும் எக்ஸ்ரே எடுக்கப் போவதாக ராகுல் காந்தி கூறுகிறார். நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் வைத்திருக்கும் சிறிய சொத்துகளையும் காங்கிரஸ் பரிசோதிக்கும். சுர்குஜாவில் உள்ள நமது பழங்குடியினர் பழங்குடியினரின் ஆபரணங்களையும் தாலியையும் அணிந்து கொள்வார்கள். இவை அனைத்தையும் காங்கிரஸ் பறித்துக்கொள்ளும். அவற்றை சமமாக பிரித்துக்கொடுக்கும். உங்களிடம் இருந்து கொள்ளையடித்து யாருக்கு விநியோகிப்பார்கள் தெரியுமா? இந்த பாவத்தைச் செய்ய நீங்கள் என்னை அனுமதிப்பீர்களா?" என கேள்வி எழுப்பினார்.

Updated On: 25 April 2024 5:15 AM GMT

Related News