/* */

பாம்பன் துறைமுகத்தில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

பாம்பன் துறைமுகத்தில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ள நிலையில், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பாம்பன் துறைமுகத்தில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
X

வங்காள விரிகுடாவில் வடமேற்கு மற்றும் அதனை இணைந்த மேற்கு மத்திய பகுதியில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கிட்டத்தட்ட 7 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிப் புயலாக, குலாப் புயல் நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பாம்பன், இராமேஸ்வரம், மண்டபம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகின்றது. இதையடுத்து, இன்று பாம்பன் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டை தமிழ்நாடு கடல்சார் வாரியம் துறைமுக அதிகாரிகள் ஏற்றியுள்ளனர். மேலும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Updated On: 26 Sep 2021 1:01 PM GMT

Related News